வேல்ஸில் உள்ள ஸ்டீல் ஆலையில் தீ விபத்து – பிரதேசவாசிகளிடம் விசேட கோரிக்கை!
வேல்ஸில் உள்ள ஸ்டீல் ஆலையொன்றில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
மத்திய மற்றும் மேற்கு வேல்ஸ் தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் ஆலையில் பணிப்புரிந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தீவிபத்தால் அப்பகுதியை புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் ஆலைக்கு அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் தீ விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





