இந்தியா செய்தி

பிரதமர் மோடியை சந்தித்தார் வெனிசுலா பதில் ஜனாதிபதி!

  • June 4, 2026
  • 0 Comments

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெனிசுலா தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். அதனைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பில் மேற்படி சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன. மேலும், எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பை […]

இலங்கை செய்தி

திருமலையில் விவசாயியின் சைக்கிளை திருடியவருக்கு விளக்கமறியல்!

  • June 4, 2026
  • 0 Comments

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை, திருடிச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மொரவெவ கமநல சேவைகள் திணைக்களத்தில் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக சென்ற விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு களவாடப்பட்டிருந்தது. மோட்டார் சைக்கிள் உரிமையாளர் , பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் CCTV காட்சிஉதவியுடன் […]

இலங்கை செய்தி

தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல்: தவிசாளரிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார்!

  • June 4, 2026
  • 0 Comments

தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடுகள் தொடர்பில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோப்பாய் பொலிஸாரினால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் வித்தாக நஞ்சருந்தி தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகி பொன். சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு, உரும்பிராயில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலையடியில் நாளை வெள்ளிக்கிழமை காலை 8:00 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

ஸ்பெயின் – பிரபல சுற்றுலாத் தளத்தில் காட்டுத்தீ!! முகாமிடும் படையினர்!

  • June 4, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தளமான முர்சியாவின் Murcia லாஸ் காரெஸில் (Los Garres) பரவிய காட்டுத்தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக சுமார் 100 குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது இருப்பிடம் திரும்பியுள்ளனர். அத்துடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் தீயைக் கட்டுப்படுத்தும்  நடவடிக்கையில், இராணுவப் பிரிவுகள், விமானங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உட்பட நூற்றுக்கணக்கான அவசரகாலப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதேசமயம் மீளவும் தீ விபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் […]

இலங்கை செய்தி

சொல்லிசை கலைஞர் சங்கீதன் சார்பில் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு!

  • June 4, 2026
  • 0 Comments

கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசை கலைஞர் சங்கீதன் சார்பில், உடனடியாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞர் சங்கீதனை இன்று நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் சொல்லிசை கலைஞரான சங்கீதன், அண்மையில் விடுதலைப்புலிகளின் பாடலொன்றை மீளுருவாக்கம் செய்து பாடினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பாதுகாப்புப் […]

உலகம்

எவரெஸ்ட் சிகரத்தின் மரண மண்டலத்தில் மாயமான நபர் 07 நாட்களின்பின் உயிருடன் மீட்பு!!

  • June 4, 2026
  • 0 Comments

எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன 52 வயதான நேபாள மலையேற்ற வழிகாட்டி ஹிலாரி தாவா ஷெர்பா ஒரு வாரத்தின் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 2026 ஆம் ஆண்டு மலையேற்றப் பருவத்தின் இறுதி தருணத்தில் மரண மண்டல பகுதியில் வைத்து அவர் மாயமானதாக கூறப்படுகிறது. கடந்த ஏழு நாட்களாக  ஆக்ஸிஜன், உணவு, தண்ணீர் எதுவும் இன்றி  உயிர் பிழைத்திருந்த அவர், ‘அடிவார முகாமுக்கு அருகில்’ கண்டுப்பிடிக்கப்படதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் தற்போது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.    

ஐரோப்பா முக்கிய செய்திகள்

UKவில் மாணவர் விசாவை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு கடும் நடவடிக்கை!

  • June 4, 2026
  • 0 Comments

விசா முறைகேடுகளில் ஈடுபடும் சர்வதேச மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இருந்து தடை  செய்யக்கூடிய புதிய சீர்திருத்தங்களை பிரித்தானிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கற்றல் நோக்கத்தோடு பிரித்தானியாவிற்குள் நுழைபவர்கள் அந்த விசாக்களை துஷ்பிரயோகம் செய்வது இனங்காணப்பட்டதை தொடர்ந்தே  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த விசாக்கள் புகலிடம் கோருவதற்கான ஒரு வழியாகப் பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை கடுமையாக்க  தற்போது புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி, பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களுக்காகக் குறைந்தபட்சம் 90 சதவீதப் பாட நிறைவு விகிதத்தையும் 95 […]

இலங்கை

நாவலப்பிட்டியவில் சோகம் : முச்சக்கரவண்டி மீது மரம் விழுந்து விபத்து – மூவர் பலி!

  • June 4, 2026
  • 0 Comments

நாவலப்பிட்டிய -மாபகந்த பகுதியில் மரம் ஒன்று முச்சக்கரவண்டி மீது விழுந்ததில் பாடசாலை மாணவன் உட்பட மூவர் பலியாகியுள்ளனர். குறித்த விபத்த இன்று காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவர் ஒருவர், அவருடைய தாய் மற்றும் மற்றொரு பெண் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. முச்சக்கர வண்டி ஓட்டுநர் விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளார். பிரதேசவாசிகளின் உதவியுடன் குறித்த மரம் அகற்றப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை குறித்த மரம்  சில காலமாக அழுகிய நிலையில் இருந்ததாகவும், அதை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு முன்னரே […]

இலங்கை செய்தி

முதியோர் இல்ல தீ விபத்து: பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு! பணிப்பாளர் கைது!

  • June 4, 2026
  • 0 Comments

ஹெரணை, அங்குருவாதொட்ட, பட்டகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. எரிகாயங்களுக்கு உள்ளான 07 பேர் ஹெரனை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். மேலும் மூவரைக் காணவில்லை. தீ விபத்து ஏற்பட்டவேளை அங்கு சுமார் 72 பேர்வரை இருந்துள்ளனர் என தெரியவருகின்றது. அதேவேளை, இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக, முதியோர் இல்லத்தின் பணிப்பாளர் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இன்று (04) ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]

செய்தி வணிகம்

‘Lynas’ நிறுவனத்தின் இடைக்கால CEOவாக Pol Le Roux நியமனம்!

  • June 4, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் முன்னணி நிறுவனமான Lynas Rare Earths , தனது நிறுவனத்தின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக Pol Le Roux எதிர்வரும் 30 ஆம் திகதி பொறுப்பேற்பார் என்று இன்று அறிவித்தது. சீனாவுக்கு வெளியே உலகின் மிகப்பெரிய அரிய வகை மண் தாதுக்களை உற்பத்தி செய்யும் மேற்படி நிறுவனத்தில், தலைமைப் பதவி மாற்றம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளாக நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தி, தற்போது ஓய்வு பெறவுள்ள manda Lacaze இன் இடத்துக்கே […]