சவுத்தாம்ப்டனில் பொது அமைதி சீர்குலைவு : இருவர் மீது சட்ட நடவடிக்கை!
இறக்கும் தருவாயில் கைவிலங்கிடப்பட்ட ஹென்றி நோவாக்கின் மரணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சவுத்தாம்ப்டனில் (Southampton) பொது அமைதி சீர்குலைந்தது.
குறித்த பகுதியில் கலவரம் வெடித்த நிலையில் பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது பொலிஸாரை தாக்கிய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வன்முறை, கலவரத்தை ஏற்படுத்துதல், ஆயுதம் வைத்திருந்தல், பொலிஸாரை தாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
50 வயதான மாட் ஸ்டைலர் (Matt Styler) மற்றும் 44 வயதான டேனியல் ஃப்ராஸ்ட் (Daniel Frost) மீது இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மேற்படி இருவரும் இன்று சவுத்தாம்ப்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.




