உலகம்

UAE இல் இருந்து முவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தல்

  • June 16, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீகரத்தில் இருந்து 3500 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஈரான்-அமெரிக்க மோதலின் போது சமூக ஊடக விதிமுறைகளை மீறியதற்காக அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நாடு கடத்தப்பட்டவர்களின் சொத்துக்களும் உடைமைகளும், சம்பந்தப்பட்ட சட்ட நடைமுறைகளின்படி அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில்,  சொத்துப் பரிமாற்றம் அல்லது அது தொடர்பான பிற சிக்கல்களை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தான் […]

இலங்கை

விசாரணைக்கு உதவுங்கள் – சுரேஷ் சலேவிடம் அமைச்சர் கோரிக்கை

  • June 16, 2026
  • 0 Comments

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்ய, முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சாலே தன்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்தி விசாரணைகளுக்கு உதவுவதே அவர் செய்ய வேண்டிய சரியான காரியம் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்  நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்ற அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  “ஒரு முன்னாள் புலனாய்வு மற்றும் இராணுவ அதிகாரி என்ற முறையில், […]

ஐரோப்பா

போர்த்துகலில் கொலை குற்றவாளியான பொலிஸ் அதிகாரிக்கு தண்டனையில் இருந்து விலக்கு?

  • June 16, 2026
  • 0 Comments

போர்த்துக்கலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொலை குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டபோதிலும், அவருக்கு சிறை தண்டனையில் இருந்து விலக்களிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2024-ஆம் ஆண்டில் இடம்பெற்ற கலவரம் ஒன்றை கட்டுப்படுத்தும் பணியில் இருந்தபோது புருனோ பின்டோ ( Bruno Pinto) என்ற அதிகாரி  கேப் வெர்டே நாட்டைச் சேர்ந்த  மோனிஸ் என்பரை சுட்டுக் கொன்றமைக்காகவே அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். வழக்கை விசாரணை செய்த   போர்த்துகீசிய நீதிமன்றம் குறித்த அதிகாரியை இரண்டாம் நிலைக் குற்றவாளி எனக் கண்டறிந்தது. அவருக்கு […]

உலகம்

“ஈரானுடனான ஒப்பந்தம் இஸ்ரேலை மேலும் பாதுகாப்பானதாக்கும்” – ஜே.டி. வான்ஸ் அறிவிப்பு

  • June 16, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அமைதி ஒப்பந்தத்தில், வரும் நாட்களில் இஸ்ரேல் சேர்க்கப்படும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிபிஎஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த மூலோபாய ஒப்பந்தம் குறித்து இஸ்ரேலுக்கு இருந்த ஆரம்பகட்ட கருத்து வேறுபாடுகள் பற்றிய கேள்விகளுக்கு வான்ஸ், நெருங்கிய நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பானது என்று கூறியுள்ளார். “இந்த ஒப்பந்தம் இஸ்ரேலையும் ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் […]

விளையாட்டு

மகத்தான மைல்கல்லை எட்டத் தயாராகும் மெஸ்ஸி

  • June 16, 2026
  • 0 Comments

கடந்த உலகக் கிண்ணத்தை வெற்றிக்கொண்ட பின்னர் அர்ஜென்டினா மற்றொரு வெற்றிக்குத் தயாராகி வரும் நிலையில், அந்த அணியின் ஜாம்பவாக் வீரரான லியோனல் மெஸ்ஸி மற்றொரு வரலாற்றுச் சாதனையை எதிர்நோக்கியுள்ளார். நாளை காலை அல்ஜீரியா அணியை எதிர்த்து விளையாடவுள்ள நிலையில், ​​மெஸ்ஸி தனது சர்வதேச வாழ்க்கையில் ஒரு மகத்தான மைல்கல்லை எட்டுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அர்ஜென்டினா ஜெர்சியில் மெஸ்ஸி விளையாடும் 200வது போட்டியாகும். மெஸ்ஸியின் இந்த பயணம், 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் திகதி, ஹங்கேரிக்கு […]

உலகம் செய்தி

“இஸ்ரேலின் உயிர்நாடி அமெரிக்காவின் கைகளுக்குள்”

  • June 16, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் ஆதரவு இல்லாவிட்டால், இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்திருக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். “நான் இல்லாவிட்டால் இங்கு இஸ்ரேல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் இஸ்ரேலுக்காக நான் செய்த காரியங்களைச் செய்வதற்கு வேறு எந்தவொரு ஜனாதிபதியும் தயாராக இருந்திருக்கவில்லை” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தனக்கு மிகச் சிறந்த நட்பு இருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ட்ரம்ப், லெபனான் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் […]

செய்தி விளையாட்டு

உலகக்கிண்ண தொடரில் ஈரானுக்கு பெரும் அநீதி!

  • June 16, 2026
  • 0 Comments

ஈரான் அணி வீரர்கள், உலகக்கோப்பை தொடரில் மிகுந்த அநீதிக்கு உள்ளாக்கப்படுவதாக ஈரானியக் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் Amir Ghalenoei கவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற முதல் போட்டி முடிந்தவுடன், வீரர்கள் உடனடியாக மெக்சிகோவிற்குத் திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்ட நிலையிலேயே, அவர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். விசா சிக்கல்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக பயிற்சியைத் தொடங்குவதில் ஈரான் அணியினர் ஏற்கனவே பல தடைகளை எதிர்கொண்டனர். போதிய ஓய்வு மற்றும் உடல்நல […]

உலகம் செய்தி

அணு ஆயுதம் குறித்து 2ஆம் சுற்றிலேயே பேச்சு!

  • June 16, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று (16) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். பேச்சுவார்த்தைகள் இரண்டு முக்கிய கட்டங்களாக பிரிக்கப்பட்டு, முதல் கட்டத்தில் ஹார்முஸ் நீரிணை விவகாரம் மற்றும் உள்கட்டமைப்பு மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கப்படும். இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் அணுசக்தி விவகாரங்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குவது தொடர்பான இறுதிக் […]

இலங்கை செய்தி

கைது பயத்தில் கோட்டா: நீதிமன்றத்துக்கு ஓட்டம்!

  • June 16, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு அமைய, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தான் கைது செய்யப்படுவதற்கு தடை விதிக்ககோரி , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாகவே இந்த மனுவை கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்துள்ளார். பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அதன் நிலையப் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, […]

உலகம் ஐரோப்பா

பிரித்தானிய நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கும் ஹமாஸ் அமைப்பு!

  • June 16, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் Palestine Action அமைப்புக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ” இது சியோனிச (இஸ்ரேலிய) குழுக்களின் அழுத்தத்தின் கீழ் எடுக்கப்பட்ட ஓர் அரசியல் உள்நோக்கம் கொண்ட முடிவாகும்” என ஹமாஸ் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஸாவில் இஸ்ரேலிய இராணுவத்தால் அரங்கேற்றப்படும் இனப்படுகொலையைக் கண்டிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் ஒடுக்குவதும், அச்சுறுத்துவதுமே இந்த முடிவின் நோக்கமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]