உலகக்கிண்ண தொடரில் ஈரானுக்கு பெரும் அநீதி!
ஈரான் அணி வீரர்கள், உலகக்கோப்பை தொடரில் மிகுந்த அநீதிக்கு உள்ளாக்கப்படுவதாக ஈரானியக் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் Amir Ghalenoei கவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற முதல் போட்டி முடிந்தவுடன், வீரர்கள் உடனடியாக மெக்சிகோவிற்குத் திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்ட நிலையிலேயே, அவர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.
விசா சிக்கல்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக பயிற்சியைத் தொடங்குவதில் ஈரான் அணியினர் ஏற்கனவே பல தடைகளை எதிர்கொண்டனர்.
போதிய ஓய்வு மற்றும் உடல்நல மீட்பு கால அவகாசம் வழங்கப்படாமல் கட்டாயப் பயணம் மேற்கொள்ளச் செய்வது தங்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி என்று பயிற்சியாளர் விவரித்துள்ளார்.
இத்தகைய சவால்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தனது அணி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.





