இலங்கை

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக என். சரவணபவன்

  • June 16, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக டொக்டர் என்.சரவணபவன் நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் இன்று (16) இந்நியமனக் கடிதத்தினை அமைச்சர் டொக்டர் நளிந்த ஐயதிஸ்ஸ வழங்கி வைத்தார். வாழைச்சேனை தள வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி வந்த வேளை சிரேஷ்ட வகாரணமாகஸ நிர்வாகத்துறையில் ஏற்பட்ட ஆளணி பற்றாக்குறை காரணமாக கடந்த 2026 06மாதம் 04 திகதி நேர்முகப் பரீட்சை இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் இவர் குறித்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட நிலையில் சுகாதார […]

ஐரோப்பா

ஸ்டாமர் பதவி விலகலை அறிவிக்க வேண்டும் – வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்தல்

  • June 16, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் இடைத்தேர்தலில் தொழிலாளர் கட்சி பாரிய தோல்வியடைந்துள்ள நிலையில் பதவி விலகல் தொடர்பில் பிரதமர் ஸ்டாமர் அறிவிக்க வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting)  வலியுறுத்தியுள்ளார். வரும் வெள்ளிக்கிழமைக்கு முன் அவர் தனது இராஜினாமா தொடர்பான முடிவை அறிவிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், தொழிற்கட்சியில்  தலைமைப் போட்டி நடைபெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் வாக்குச்சீட்டில் இடம்பெறுவதற்குத் தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு […]

இலங்கை செய்தி

சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக வியூகம் வகுக்கும் இலங்கை

  • June 16, 2026
  • 0 Comments

இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி, அமைச்சர் விஜித ஹேரதின் தலைமையில் இன்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. சுற்றுலாத்துறையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் தடைகளை நீக்கி, இலங்கையை ஒரு நிலையான சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களை இணைத்து விசேட சுற்றுலா வலயமொன்றை உருவாக்குவதற்கான முன்மொழிவு குறித்து இங்கு விசேடமாக ஆராயப்பட்டது. இதன்கீழ் தெற்கு மற்றும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இந்தியாவில் டெலிகிராம் செயலி முடக்கம்

  • June 16, 2026
  • 0 Comments

டெலிகிராம் செய்தியிடல் செயலியை இந்திய அரசாங்கம் தற்காலிகமாக முடக்கியுள்ளது. மருத்துவ நுழைவுத் பரீட்சையில் (நீட்) பங்கேற்கும் விண்ணப்பதாரர்களை ஏமாற்றுவதற்காக டெலிகிராம் செயலி பயன்படுத்தப்பட்டது தெரியவந்ததை அடுத்து மத்திய அரசாங்கம் இன்று அந்த செயலியை முடக்கியுள்ளது. இதன்படி வரும் ஜுன் மாதம் 22 ஆம் திகதிவரை இந்த செயலி  தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து மே மாதம் இடம்பெறவிருந்த பரீட்சை இரத்து செய்யப்பட்டது. இதனால் குறைந்தது 2.3 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகம் செய்தி

ஈரானின் அணு ஆயுத கனவு தகர்ப்பு

  • June 16, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள புதிய அமைதி உடன்படிக்கை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் G7 உச்சி மாநாட்டில் தெளிவுபடுத்தியுள்ளார். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை உருவாக்காது என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆரம்பக்கட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, வரவிருக்கும் வெள்ளிக்கிழமை முதல் சுவிட்சர்லாந்தில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட உள்ளன. ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் நீக்கம் போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து இதில் […]

ஐரோப்பா செய்தி

புடினை விமர்சித்த ஓவியர் போலந்தில் சுட்டுக்கொலை

  • June 16, 2026
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைத் தொடர்ந்து விமர்சித்து வந்த பிரபல ரஷ்ய ஓவியர் ஒருவர், போலந்து நாட்டில் ‘மரணதண்டனை’ பாணியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இக்கொலைச் சம்பவம் தொடர்பில் போலந்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். Semyon Skrepetsky என்ற புனைப்பெயரில் புகழ்பெற்ற 44 வயதுடைய Robert Kuzovkov என்ற ஓவியரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். பெலாரஸ் எல்லையிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போலந்தின் Biała Podlaska நகரில் திங்கட்கிழமை காலை இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. […]

உலகம் முக்கிய செய்திகள்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஒருவர் உயிரிழப்பு!

  • June 16, 2026
  • 0 Comments

சீனாவின் வடமேற்கு மாகாணமான கிங்ஹாயில்  நேற்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் நான்கு பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம், கிங்ஹாயின் (Qinghai ) ஹைக்ஸி (Haixi )மாகாணத்தில் உள்ள உயரமான பகுதியில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்க மையத்திற்கு அருகில் நிலக்கரி சுரங்கம் ஒன்று இருந்ததாகவும் அந்த சுரங்கத்தில் பணிப்புரிந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களை அதிகாரிகள் மதிப்பிட்டு […]

இலங்கை

90 வழிபாட்டுத் தலங்களைப் புனரமைக்க தேவையான நிதியை ஒதுக்க அங்கீகாரம்!

  • June 16, 2026
  • 0 Comments

தித்வா புயலால் சேதமடைந்த  90 வழிபாட்டுத் தலங்களைப் புனரமைக்க தேவையான நிதியை வழங்க அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், பேரிடரால் பாதிக்கப்பட்ட மதத் தலங்களை மீட்டெடுக்கும் தற்போதைய முயற்சிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. 758 பௌத்தக் கோயில்கள், 272 இந்து கோவில்கள், 199 மசூதிகள் மற்றும் 99 தேவாலயங்கள் உட்பட 1,328 மத ஸ்தலங்கள் தித்வா புயல் தாக்கத்தில் அழிந்துள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இவற்றில் 178 மதத் தலங்களில் புனரமைப்புப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தடுப்பதில் G-7 நாடுகள் உறுதி

  • June 16, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவது எரிசக்தி விலைகளைக் குறைக்க உதவும் என்று பிரித்தானிய பிரதமர் Keir Starmer நம்பிக்கை வெளியிட்டுள்ளார். G7 மாநாட்டில் பங்கேற்றுள்ள அவர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார். ஹார்முஸ் நீரிணைமீள திறக்கப்படுவது பிரித்தானியாவுக்கு மிக முக்கியமானதும் என்று அவர் குறிப்பிடுகிறார். அமைதி ஒப்பந்தம் குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டமை தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இதர தூதர்களுக்கு பிரித்தானிய பிரதமர், பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுப்பதில் G7 […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழக அரசியலில் பரபரப்பு-தொடரும் ராஜினாமா

  • June 16, 2026
  • 0 Comments

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் திருவிழா முடிவடைந்திருந்தாலும், தமிழக அரசியல் களம் இன்னும் பரபரப்பாகவே உள்ளது. பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் நாள்தோறும் அரசியல் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் கையளித்தார். சி.விஜயபாஸ்கரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். 2011 முதல் விராலிமலை தொகுதி […]