இலங்கை

விசாரணைக்கு உதவுங்கள் – சுரேஷ் சலேவிடம் அமைச்சர் கோரிக்கை

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்ய, முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சாலே தன்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்தி விசாரணைகளுக்கு உதவுவதே அவர் செய்ய வேண்டிய சரியான காரியம் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்ற அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  “ஒரு முன்னாள் புலனாய்வு மற்றும் இராணுவ அதிகாரி என்ற முறையில், தனக்குத் தெரிந்த தகவல்களை மறைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை .

இருப்பினும், ஒரு புலனாய்வு மற்றும் இராணுவ அதிகாரி என்ற முறையில்  சுரேஷ் சாலே செய்யக்கூடிய சிறந்த காரியம், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தனக்குத் தெரிந்தவற்றை வெளியிடுவதே ஆகும். பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம், குற்றப் புலனாய்வாளரை இடமாற்றம் செய்ய சிரமப்படவில்லை. உங்கள் மடிக்கணினி அல்லது கைப்பேசியில் உள்ள தகவல்களை வழங்குங்கள். அதை மறைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

அவருக்காக எந்தவொரு சிறப்புச் சிறையோ அல்லது சிறப்பு வசதிகளோ வழங்கப்படவில்லை. முந்தைய அரசாங்கங்களின் தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் நபர்களைத் தடுத்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட அதே பொதுவான நடைமுறையே அவருக்காகவும் செயல்படுத்தப்படுகிறது” எனக் கூறினார்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்