உலகம்

இந்தோனேசியாவில் கோர விபத்து – தீயில் சிக்கி பலர் பலி!

  • May 7, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள நெடுஞ்சாலையொன்றில் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள டிரான்ஸ்-சுமத்ரா நெடுஞ்சாலையில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சுமத்ராவில் உள்ள லுபுக்லிங்காவிலிருந்து கிழக்குக் கடற்கரையில் உள்ள ஜாம்பிக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து எதிர் திசையில் பயணித்த லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் இரு வாகனங்களும் தீப்பற்றி எறிந்தமையால் பெரும்பாலான பயணிகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை, வியட்நாமுக்கிடையில் நாளை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

  • May 7, 2026
  • 0 Comments

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To Lam), இன்று (07) இரவு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தருகிறார். இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 55 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில், 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வியட்நாமுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது விடுத்த அழைப்பிற்கு இணங்க, இந்த வருகை இடம்பெறுகிறது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் […]

உலகம் செய்தி

ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதிகளுக்கு முடிவு கட்டியது இஸ்ரேல்!

  • May 7, 2026
  • 0 Comments

லெபனான், பெய்ரூட் நகரின் தெற்குப் பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கியத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பின் உயர்மட்டப் பிரிவான ரத்வான் Radwan பிரிவின் தலைவர் அகமது பலுத் உள்ளிட்ட மூன்று முக்கியத் தலைவர்கள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. வான்வழிப் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சார்ந்த பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளும் இஸ்ரேலால் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரான் ஆதரவு பெற்ற குழுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  

உலகம்

சீனாவுடனான பதற்றம் : நீர்மூழ்கி கப்பலுக்கான முதல் டார்பிடோவை சோதனை செய்த தைவான்!

  • May 7, 2026
  • 0 Comments

தைவான் உள்நாட்டில் தயாரித்துள்ள  நீர்மூழ்கி கப்பலுக்கான முதல் டார்பிடோ (torpedo) சோதனை ஏவுதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இது, சீனக் கடற்படைக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் முயற்சியில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. ஒருவேளை மோதல் ஏற்பட்டால், முக்கிய கடல்வழிப் பாதைகளைப் பாதுகாப்பதற்கு இந்த நடவடிக்கை மிகவும் இன்றியமையாதது. சீனா நீண்டகாலமாக  தைவானை உரிமைக்கோரி வருகின்றது. அவ்வவ்போது இருநாடுகளுக்கும் இடையில்  எல்லை மீறல் சண்டைகளும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தனது இராணுவ பலத்தை அதிகரிக்க தைவான் முனைப்பு காட்டி வருகிறது. […]

உலகம் செய்தி

பிரான்ஸ் விமான நிறுவனங்களுக்கு சலுகை!

  • May 7, 2026
  • 0 Comments

விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால் பிரான்ஸ் அரசாங்கம் தனது நாட்டு விமான நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கத் திட்டமிட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடும் விலை ஏற்றமும் ஐரோப்பாவின் விமானப் போக்குவரத்து சேவையைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனைச் சமாளிக்க வரிச் சலுகைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு கட்டணங்களைச் செலுத்துவதில் கால அவகாசம் போன்ற சலுகைகளை வழங்க பிரான்ஸ் போக்குவரத்து அமைச்சர் முன்வந்துள்ளார். ஐரோப்பா தனது எரிபொருள் தேவைக்கு அதிகளவில் மத்திய கிழக்கையே நம்பியிருப்பதால், இந்தச் சூழல் ஒரு […]

ஆஸ்திரேலியா செய்தி

ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்புடைய பெண்கள்மீது பயங்கரவாத விசாரணை!

  • May 7, 2026
  • 0 Comments

சிரியாவில் உள்ள அகதி முகாம்களில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த, ஐ.எஸ். (ISIS) அமைப்புடன் தொடர்புடைய ஆஸ்திரேலியப் பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் இன்று ஆஸ்திரேலியாவை வந்தடைந்தனர். ஒரு குழுவினர் ஆஸ்திரேலிய நேரப்படி இன்று மாலை 5:30 மணியளவில் மெல்போர்ன் விமான நிலையத்திலும், மற்றொரு பெண்ணும் குழந்தையும் அடுத்த 15 நிமிடங்களில் சிட்னியிலும் தரையிறங்கினர். இவர்கள் அரசியல் வட்டாரங்களில் ‘ஐ.எஸ். மணப்பெண்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். 2019-இல் ஐ.எஸ். அமைப்பின் வீழ்ச்சிக்குப் பிறகு, சிரியாவில் உள்ள அல்-ரோஜ் […]

அரசியல் இலங்கை செய்தி

தோட்டத் தொழிலாளர்கள்மீது தொடர் தாக்குதல்: அதிர்ந்தது நாடாளுமன்றம்!

  • May 7, 2026
  • 0 Comments

  ” மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். தோட்ட அதிகாரியா, தொழிலாளியா என்பது முக்கியமல்ல. சட்டமென்பது அனைவருக்கும் சமம்.” இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் இன்று (07) திட்டவட்டமாக அறிவித்தார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார். மஸ்கெலியா, மொக்கா தோட்டத்தில் தோட்ட தொழிலாளி […]

உலகம்

தென்கொரியாவின் முன்னாள்  பிரதமர் ஹான் டக்-சூவின் தண்டனைக்காலம் குறைப்பு!

  • May 7, 2026
  • 0 Comments

தென்கொரியாவின் முன்னாள்  பிரதமர் ஹான் டக்-சூவின் (Han Duck-soo ) தண்டனைக் காலம் குறைக்கப்பட்டுள்ளது. யூன் சுக் இயோல் ஆட்சி காலத்தில்   இராணுவ சட்டத்தை தவறாக பிரயோகித்தபோது அவருக்கு ஆதரவாக செயற்பட்டமை தொடர்பில் ஹானுக்கு 23 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில்,  தற்போது 15 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதில் முன்னாள் பிரதமர் ஹான் டக்-சூவின் (Han Duck-soo ) பங்கு தொடர்பாக, தென் கொரிய மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் மேற்படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. யூன் […]

உலகம்

அப்பாஸ் அராக்சியை தொடர்ந்து சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்த அமெரிக்க குழு!

  • May 7, 2026
  • 0 Comments

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் சீனப் பயணத்தைத் தொடர்ந்து, அமெரிக்க செனட் சபை  பிரதிநிதிகள் குழு ஒன்று பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயைச் (Wang Yi ) இன்று சந்தித்துள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் இந்தப் பயணம், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரதிநிதிகள் குழுவிற்குத் தலைமை தாங்கும் குடியரசுக் கட்சி செனட்டர் ஸ்டீவ் டைன்ஸ், பெய்ஜிங்கிற்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான உறவுகளில் “ஸ்திரத்தன்மை […]

இலங்கை

மத்தியக்கிழக்கில் நிலவும் மோதல் போக்கு தொடர்பில் இலங்கை கரிசனை!

  • May 7, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் போக்கு மற்றும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இலங்கை கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பில்  வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில், இலங்கை சமூகம் உட்பட, இப்பிராந்தியத்தில் கணிசமான சர்வதேச புலம்பெயர் சமூகம் உள்ளது என்றும், அவர்களின் பாதுகாப்பும் நல்வாழ்வும் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் கூறப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு, குடிமை உள்கட்டமைப்பு மற்றும் முக்கிய எரிவாயு விநியோகச் சங்கிலிகளின் […]