இந்தோனேசியாவில் கோர விபத்து – தீயில் சிக்கி பலர் பலி!
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள நெடுஞ்சாலையொன்றில் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள டிரான்ஸ்-சுமத்ரா நெடுஞ்சாலையில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சுமத்ராவில் உள்ள லுபுக்லிங்காவிலிருந்து கிழக்குக் கடற்கரையில் உள்ள ஜாம்பிக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து எதிர் திசையில் பயணித்த லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் இரு வாகனங்களும் தீப்பற்றி எறிந்தமையால் பெரும்பாலான பயணிகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் […]













