மத்தியக்கிழக்கில் நிலவும் மோதல் போக்கு தொடர்பில் இலங்கை கரிசனை!
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் போக்கு மற்றும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இலங்கை கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அவ் அறிக்கையில், இலங்கை சமூகம் உட்பட, இப்பிராந்தியத்தில் கணிசமான சர்வதேச புலம்பெயர் சமூகம் உள்ளது என்றும், அவர்களின் பாதுகாப்பும் நல்வாழ்வும் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு, குடிமை உள்கட்டமைப்பு மற்றும் முக்கிய எரிவாயு விநியோகச் சங்கிலிகளின் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக இலங்கை உறுதியாக நிற்கிறது என்று அந்த அறிக்கை கூறியது.
நெருக்கடி தீவிரமடைவதைக் குறைப்பதற்காக, அனைத்துத் தரப்பினரும் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடித்து, ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபடுமாறு இலங்கை அழைப்பு விடுக்கிறது என வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்ட அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.





