ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதிகளுக்கு முடிவு கட்டியது இஸ்ரேல்!
லெபனான், பெய்ரூட் நகரின் தெற்குப் பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கியத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹிஸ்புல்லா அமைப்பின் உயர்மட்டப் பிரிவான ரத்வான் Radwan பிரிவின் தலைவர் அகமது பலுத் உள்ளிட்ட மூன்று முக்கியத் தலைவர்கள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
வான்வழிப் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சார்ந்த பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளும் இஸ்ரேலால் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரான் ஆதரவு பெற்ற குழுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.





