இலங்கை செய்தி

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை உணர்வோடு அணுகவேண்டும்!

  • May 7, 2026
  • 0 Comments

“வட மாகாணத்தைப் பொறுத்தவரை, ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம்’ என்பது வெறும் அரச திணைக்களங்களின் காகிதங்களில் உறங்கும் ஒரு சாதாரண கோப்புச் சார்ந்த விடயமல்ல. இது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் ஆறாத கண்ணீரோடும், பல தசாப்த கால ஏறுமாறான காத்திருப்போடும், விவரிக்க முடியாத வலியோடும் பின்னிப்பிணைந்த ஓர் அதிஉணர்வுபூர்வமான மனிதாபிமானப் பிரச்சினையாகும். அந்த உணர்வோடு அதை அணுகவேண்டும்.” இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு வேலைத்திட்டம், […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு நற்செய்தி : இலவச விசா அணுகல்!

  • May 7, 2026
  • 0 Comments

பிரித்தானியா, ஜெர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து உட்பட மேலும் 40 நாடுகளுக்கு  இலவச விசா வசதியை  வழங்க இலங்கை நாடாளுமன்றம்  ஒப்புதல் அளித்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால  தெரிவித்தார். தொடர்புடைய முன்மொழிவு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஒப்புதல் வழக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆஸ்திரியா, பெலாரஸ், ​​பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, போலந்து, […]

இலங்கை

அவசரகால நிலை நீட்டிப்பு!

  • May 7, 2026
  • 0 Comments

நாட்டின் பொது அவசரகாலநிலை  மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.  இதன்போது  ஆதரவாக 145 பேரும் எதிராக 06 பேரும் வாக்களித்தனர். இதற்கமைய 136 மேலதிக வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.      

ஐரோப்பா

ட்ரம்பின் அவசர முடிவால் வேலையிழக்கும் மக்கள் : ஜெர்மனியில் நெருக்கடி!

  • May 7, 2026
  • 0 Comments

ஜெர்மனியில் இருந்து 5000 துருப்புக்களை திரும்பப் பெற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அந்நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு தயாராகி வருகிறது. பாதிக்கப்படும் படைப்பிரிவுகள் குறித்த விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், வில்செக்கின் ரோஸ் (Vilseck’s Rose) படைத்தளத்தில் நிலை கொண்டுள்ள துருப்புக்கள் வெளியேறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த படைத்தளம் அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் வேலையிழப்பு பிரச்சினையை எதிர்கொள்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள மதுபான விடுதிகள், உணவகங்கள், […]

ஐரோப்பா

உள்ளுராட்சி தேர்தல் : ஸ்டாமருக்கு கடும் பின்னடைவு!

  • May 7, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் உள்ளுராட்சி மன்ற தேர்தல் இன்று  நடைபெறுகிறது. இந்த தேர்தல் பிரதமர் கெய்ர் ஸ்டாமருக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து முழுவதும் சுமார் 5,000 உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களையும், ஒரு சில மேயர்களையும், அத்துடன் ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள பகுதிளில் தன்னாட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இந்த தேர்தல் நடைபெறுகிறது. காலை 07 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு இரவு 10 மணிக்கு நிறைவடையவுள்ளது. அதேநேரம் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இன்றைய தினமே ஆரம்பிக்கப்பட்டு […]

செய்தி

தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உளவுத்துறை எச்சரிக்கை!

  • May 7, 2026
  • 0 Comments

தமிழகத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய உளவுத் துறை , பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் இன்னும் ஆட்சி அமைக்காத நிலையில், சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டியே உளவுத்துறை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க குறைந்தது 118 எம்எல்ஏக்கள் தேவை என்பதால் […]

இலங்கை செய்தி

“போதைப்பொருள் ஒழிப்பு” – ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்பு!

  • May 7, 2026
  • 0 Comments

போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் உட்பட அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகளை விரைவாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுச் சபை இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் மீண்டும் சமூகத்திற்குள் செல்வதைத் தடுத்து, அவற்றை சட்டபூர்வமான நடைமுறைகளின் கீழ் விரைவாக அழிப்பதற்கும், குற்றவாளிகளுக்குத் […]

இலங்கை செய்தி

சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைது!

  • May 7, 2026
  • 0 Comments

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (07) பதிவாகியுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மொரவௌ 10ம் கட்டை பகுதியில் வசித்து வரும் 40 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இலங்கை

தெனியாய கல்வி வளையத்தில் 04 பாடசாலைகளை மூட நடவடிக்கை!

  • May 7, 2026
  • 0 Comments

மாணவர்களிடையே வேகமாகப் பரவிவரும் காய்ச்சல் காரணமாக, தெனியாய கல்வி மண்டலத்தில் உள்ள நான்கு பாடசாலைகள் நாளை (08) மூடப்பட்டுள்ளன. சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெனியாய மண்டல கல்விப் பணிப்பாளர் நிஷாக ஹெட்டிகொட தெரிவித்துள்ளார். அதன்படி, தெனியாய மத்திய கல்லூரி, தெனியாய ராஜபக்ச மகா வித்தியாலயம், தெனியாய புனித மத்தேயு இருமொழிக் கல்லூரி மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகியவை மூடப்படும். சம்பந்தப்பட்ட பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் […]

ஐரோப்பா

வைரஸ் தாக்கம் : சுய தனிமைப்படுத்தலுக்கு அழைப்பு!

  • May 7, 2026
  • 0 Comments

ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பலில் பயணித்த பிரித்தானிய பயணிகள்  சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த கப்பல் தற்போது டெனரிஃப் தீவிற்கு பயணித்துள்ளது. இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு முகமையின் (UKHSA) தலைமை அறிவியல் அதிகாரியான பேராசிரியர் ராபின் மே ( Robin May) “இந்த சொகுசுக் கப்பலில் நேரடியாகத் தொடர்பில்லாத பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவது குறைவு எனத் தெரிவித்துள்ளார். ஹன்டா வைரஸின் “மிகவும் தீவிரமான நிலை காரணமாக மக்கள் தங்களை எட்டு வாரங்கள் வரை” […]