வெளிநாட்டு உதவிகளை கண்காணிக்க சிறப்பு குழு நியமனம்!
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகளால் கொடையாக வழங்கப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களை, திறம்பட நிர்வகிப்பதை மேற்பார்வையிடுவதற்கான சிறப்புக் குழுவொன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார். பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான இந்தக் குழுவில், தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையத்தின் மேலதிக செயலர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள், காவல்துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். கொடைகள் உதவி தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படுவதை […]













