EES அமைப்பு – ஐரோப்பிய தலைவர்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்
பயோமெட்ரிக் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு (EES) திறம்பட செயல்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ACIயின் தலைவரான ஸ்டெஃபான் ஷுல்டே (Stefan Schulte) இந்த அமைப்பு திறம்பட செயற்படவில்லை என்பதை ஐரோப்பிய தலைவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
EES-இன் தற்போதைய நிலை ஐரோப்பா முழுவதிலும் உள்ள விமான நிலைய தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு ஒரு பெரும் கவலையாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் மாதம் முழுமையாகச் செயல்படுத்தப்பட்ட ஷெங்கன் பகுதி நுழைவு-வெளியேறும் அமைப்பு (EES), சில சமயங்களில் ஆறு மணி நேரம் வரை நீடிக்கும் நீண்ட வரிசைகளுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.
அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியம் சாராத பயணிகள் மீண்டும் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படவும் வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது,




