பிரான்ஸிலும் எபோலா தொற்று – WHO வின் அறிவிப்பு
எபோலா நோய் தொற்றின் உலகளாவிய ஆபத்து குறைவாகவே உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரான்ஸில் எபோலா தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
காங்கோ ஜனநாயகக் குடியரசிலிருந்து விமானத்தில் திரும்பிய மருத்துவர் ஒருவர்க்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில கருத்து வெளியிட்டுள்ள WHO இன் தலைவரான டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், அளவுக்கு அதிகமாக எதிர்வினையாற்ற வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“பீதியடையத் தேவையில்லை” என்று கூறிய அவர், “உலகின் மற்ற பகுதிகளுக்கான ஆபத்து குறைவு” என்றும் வலியுறுத்தினார்.




