பெரும்பாலான அமெரிக்கர்களின் கவலை இதுதானாம்!!
மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் இறப்பதை விட பணம் தீர்ந்துவிடுமோ என்றே அதிகம் கவலைப்படுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
அல்லியன்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்திய பகுப்பாய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் கேள்விக்கு பதிலளித்தவர்களில் 67 சதவீதம் பேர் இந்தக் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஜெனரேஷன் எக்ஸ் குழுவினர் 73 சதவீதத்துடன் மிகவும் கவலையுள்ள குழுவாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுமார் 50 சதவீதமானோர் சந்தை சரியும்போது ஓய்வூதியக் கணக்குகளைச் சரிபார்ப்பதாகவும் தெரியவந்துள்ளது.
அதிக பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் சுகாதாரச் செலவுகள் ஆகியவை இந்த நிதி சார்ந்த அச்சங்களுக்கு முக்கிய காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.





