இலங்கை

இலங்கையில் வீதியை கடக்க முயன்ற நாயால் 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

  • January 6, 2025
  • 0 Comments

ராஜாங்கனை, அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் கவிழ்ந்து எதிரே வந்த பஸ்ஸுடன் மோதியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்தார். நேற்றிரவு (05) முச்சக்கரவண்டி, வீதியைக் கடக்கின்ற நாயுடன் மோதுவதைத் தவிர்க்க முற்பட்ட வேளையில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் பின் இருக்கையில் பயணித்த சிறுவனும் காயமடைந்து நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்தார். சாரதி மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளார். சிலாபம் […]

உலகம்

சூடானில் நடத்தப்பட வான்வழித் தாக்குதலில் 10 பேர் பலி,30 பேர் காயம்

  • January 6, 2025
  • 0 Comments

சூடான் தலைநகர் கார்ட்டூமின் தெற்கே ஒரு பகுதியை குறிவைத்து ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் என்று ஒரு தன்னார்வ குழு மற்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “கார்டூமுக்கு தெற்கே, மயோ சுற்றுப்புறத்தில் உள்ள அல்-சஹ்ரிஜ் நிலையத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து முதல் நிலை தீக்காயங்கள் உட்பட 30 பேர் காயமடைந்தனர்” என்று தெற்கு கார்டூம் எமர்ஜென்சி அறை […]

வட அமெரிக்கா

பதவியேற்றப்பின் ட்ரம்ப் செய்யவுள்ள முதற்கட்ட நடவடிக்கை : பலருக்கு பொதுமன்னிப்பு!

  • January 6, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் பதவி பிரமாணம் செய்த பின் மேற்கொள்ளவுள்ள முதல் நடவடிக்கையாக பலருக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, ஜனவரி 6 கேபிடல் கலவரம்  தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 1,500 க்கும் மேற்பட்ட நபர்களில் பலருக்கு மன்னிப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்பு விழா ஜனவரி 20ம் திகதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ள அவர், […]

உலகம்

அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை 400% உயர்த்தியுள்ள சிரிய அரசு

  • January 6, 2025
  • 0 Comments

சிரியாவின் இடைக்கால அரசாங்கம், அந்நாட்டின் அரசாங்கத் துறை ஊழியர்களின் சம்பளத்தை அடுத்த மாதம் முதல் 400 சதவீதம் உயர்த்தவுள்ளது. மேலும், ஆக்ககரமான முறையில் இயங்கவும் விவகாரங்களுக்குப் பொறுப்பேற்கும் ஆற்றலை மேம்படுத்தவும் அந்நாட்டின் அமைச்சுகள் அதிகாரபூர்வமாக மறுசீரமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக சம்பளம் வழங்கக் கூடுதலாக 1.65 டிரில்லியன் சிரிய பவுண்ட் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசாங்கத்திடம் இருக்கும் வளங்கள், வட்டார அளவில் பெறப்படும் உதவி, புதிய முதலீடுகள், […]

ஆசியா

பங்களாதேஷ் : ஷேக் ஹசீனாவுக்கு இரண்டாவது முறையாகவும் கைது வாரண்ட் பிறப்பிப்பு!

  • January 6, 2025
  • 0 Comments

நாடுகடத்தப்பட்ட முன்னாள் தலைவர் ஷேக் ஹசீனாவுக்கு பங்களாதேஷ் நீதிமன்றம் இரண்டாவது கைது வாரன்ட்டை பிறப்பித்துள்ளது. இந்த முறை பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டதில் அவர் பங்கு வகித்ததாக குற்றம் சாட்டப்பட்டதாக தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 500க்கும் மேற்பட்டோர் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது, சிலர் பல ஆண்டுகளாக இரகசிய வசதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் “ஷேக் ஹசீனா மற்றும் அவரது ராணுவ ஆலோசகர், ராணுவ வீரர்கள் மற்றும் பிற சட்ட அமலாக்க அதிகாரிகள் உட்பட […]

ஐரோப்பா

மஸ்க் ஏனைய நாடுகளில் உள்விவகாரங்களில் தலையிடுவது தொடர்பில் நோர்வே பிரதமர் அதிருப்தி!

  • January 6, 2025
  • 0 Comments

அமெரிக்காவிற்கு வெளியே உள்ள நாடுகளின் அரசியல் பிரச்சினைகளில் பில்லியனர் எலோன் மஸ்க் தன்னை ஈடுபடுத்துவது கவலை அளிப்பதாக நார்வேயின் பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோயர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய கூட்டாளியான மஸ்க், கடந்த மாதம், பிப்ரவரி மாதம் அந்நாட்டின் தேசியத் தேர்தலுக்கு முன்னதாக, ஜேர்மன் குடியேற்ற எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் கட்சிக்கு ஒப்புதல் அளித்தார். மேலும் சமீபத்தில் பிரிட்டிஷ் அரசியல் குறித்து கருத்துகளை வெளியிட்டார். இந்நிலையில் இது தொடர்பில் கருத்து […]

பொழுதுபோக்கு

முடிந்தது கொண்டாட்டம்… குடும்பத்துக்கு பிரியாவிடை கொடுத்தார் அஜித்

  • January 6, 2025
  • 0 Comments

நடிகர் அஜித்குமார் நடிப்பில் அடுத்தடுத்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். பொங்கல் கொண்டாட்டமாகவே விடாமுயற்சி படம் ரிலீசாகவிருந்த நிலையில் படம் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. அடுத்ததாக குடியரசு தினக் கொண்டாட்டமாக வரும் 23ம் தேதி விடாமுயற்சி படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து கோடைக் கொண்டாட்டமாக குட் பேட் அக்லி படமும் ரிலீசாகவுள்ளது ரசிகர்களை மிகப்பெரிய […]

இந்தியா

இந்தியாவிலும் இனங்காணப்பட்டுள்ள HMPV வைரஸ் : அச்சத்தில் மக்கள்!

  • January 6, 2025
  • 0 Comments

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் பெங்களூரில் 8 மாத குழந்தை ஒன்று இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நுரையீரல் மற்றும் சுவாச மண்டலத்தை பாதிக்கும் இந்த வைரஸ் நிலை, சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களை பாதிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த வைரஸ் நிலைமை அவ்வளவு மோசமாக இருக்காது என்று இந்திய சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஐரோப்பா

ரஷ்யாவின் கிரோவ் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலி

  • January 6, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் மேற்கு கிரோவ் பகுதியில் உள்ள மர அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதாக ரஷ்ய அவசரகால சூழ்நிலைகள் அமைச்சகம் (EMERCOM) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. மாஸ்கோவில் இருந்து வடகிழக்கே சுமார் 1,000 கிமீ தொலைவில் உள்ள கில்மேஸ் கிராமத்தில் தீ விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட அறிக்கைகள் ஏழு பேர் இறந்ததாகவும், குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் எட்டாவது உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியது. தீ விபத்துக்கான காரணம் குறித்து EMERCOM குழு விசாரணை நடத்தி […]

இந்தியா

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உறைந்துபோன ஏரியில் சிக்கிக்கொண்ட சுற்றுலாப்பயணிகள்

  • January 6, 2025
  • 0 Comments

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் சுற்றுலாப்பயணிகள் சிலர் உறைந்துபோன ஏரியில் சிக்கிக்கொண்டனர். குளிர் காலத்தில் சுற்றுப்பயணிகளிடையே பிரபலமாக இருக்கும் செலா பாஸ் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. பெண்கள் இருவர் உட்பட சுற்றுலாப்பயணிகள் நால்வர் அங்கு உறைந்துபோன ஏரியில் சிக்கிக்கொண்டனர். காலுக்குக்கீழ் உள்ள ஐஸ் கட்டி உடைந்ததும் அவர்கள் உள்ளே விழுந்தனர். அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் பதற்றம் ஏற்பட்டது. வழிப்போக்கர்கள் உடனடி நடிவடிக்கை எடுத்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்று இந்துஸ்தான் டைமஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன. […]