பொழுதுபோக்கு

நாடாளுமன்ற தேர்தல் 2024.. திருவனந்தபுரத்தில் நடிகை ஷோபனா என்ன செயறாங்க?

  • April 14, 2024
  • 0 Comments

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி துவங்க உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பாஜகவிற்கு ஆதரவாக நடிகை சோபனா பிரச்சாரம் மேற்கொள்கிறார். தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகையும், நடனக் கலைஞருமான ஷோபனா, இன்று (ஏப்ரல் 14) பாஜக-என்.டி.ஏ வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய திருவனந்தபுரம் வந்தார். இதற்காக கேரள மாநிலத்தின் தலைநகருக்கு வந்த ஷோபனா, நெய்யாற்றின்கராவில் அமைச்சர் திரு. […]

இலங்கை செய்தி

மொரகஹஹேன இரட்டை கொலையின் போது காரை மாற்றியமைத்த விதம்

  • April 14, 2024
  • 0 Comments

கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி மொரகஹஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்திற்கு சந்தேகநபர்கள் பயன்படுத்திய கார் சப்புகஸ்கந்த பிரதேசத்தில் உள்ள கராஜ் ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாகனத்தை வைத்திருந்த மற்றும் காரை வைத்திருந்த நபரே கைது செய்யப்பட்டதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் வாகனங்கள் விற்பனை மற்றும் பெயிண்ட் அடிக்கும் கேரேஜ் ஒன்றை நடத்தி வருகிறார் சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​தற்போது விளக்கமறியலில் உள்ளவரும், வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் […]

இலங்கை செய்தி

புத்தாண்டு தினத்தில் விபத்துகளினால் பலர் வைத்தியசாலையில் அனுமதி

  • April 14, 2024
  • 0 Comments

இன்று (14) காலை 7 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு விபத்துக்கள் காரணமாக 162 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதி விபத்துக்கள் காரணமாக 37 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்தார். எவ்வாறாயினும், நேற்று (13) பட்டாசு விபத்துக்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக கலாநிதி ருக்ஷான் […]

உலகம் செய்தி

உக்ரைன் நடத்திய தாக்குதலில் மேலும் 16 பேர் உயிரிழப்பு

  • April 14, 2024
  • 0 Comments

ரஷ்யப் படைகள் கைப்பற்றிய பகுதி மீது உக்ரைன் ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் 16 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட தெற்கு டோக்மாக் என்ற பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவுக்கு சொந்தமான இந்த பகுதியை குறிவைத்து உக்ரைன் தொடர் ஷெல் தாக்குதல்களை நடத்தி வருகிறது. தாக்குதலில் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

விளையாட்டு

IPL Match 29 – மும்பை அணிக்கு 207 ஓட்டங்கள் இலக்கு

  • April 14, 2024
  • 0 Comments

17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றுவரும் 29வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதி வருகின்றன. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க வீரர்களாக ரஹானே, ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். ரஹானே 5 ரன்னிலும், ரவீந்திரா 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து […]

ஐரோப்பா

போலந்தில் கருக்கலைப்பிற்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் இணைந்து போராட்டம்!

  • April 14, 2024
  • 0 Comments

போலத்தில் கருக்கலைப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கான  எதிர்ப்பாளர்கள் இன்று (14.04) வார்சாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய அரசாங்கத்தின் பிரதான கத்தோலிக்க நாட்டின் கடுமையான சட்டங்களை தாராளமயமாக்குவதற்கும், கருகலைப்பிற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டவுன்டவுன் அணிவகுப்பில் பல பங்கேற்பாளர்கள் குழந்தைகளுடன் தள்ளுவண்டிகளை தள்ளிக் கொண்டிருந்தனர், மற்றவர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு தேசியக் கொடிகள் அல்லது கருப்பையில் கருவைக் குறிக்கும் சுவரொட்டிகளை ஏந்தியிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் டொனால்ட் டஸ்கின் 4 மாத கால அரசாங்கம் […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலை நோக்கி 300 இற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவிய ஈரான்!

  • April 14, 2024
  • 0 Comments

ஈரான் ஏவிய 300 வகையான ஏவுகணைகள் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை ஈரான் ஏவியதாகவும், அவற்றில் 99 வீதமானவை இடைமறிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவ செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார். இதன்படி ஈரான் 170 ஆளில்லா விமானங்களையும், 30க்கும் மேற்பட்ட க்ரூஸ் ஏவுகணைகளையும், 120க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் ஏவியது என்று ரியர் அட்ம் டேனியல் ஹகாரி கூறினார். இதனால் இஸ்ரேலின் ஒரு விமான தளம் பாதிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். […]

இலங்கை

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த இலங்கையர்கள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

  • April 14, 2024
  • 0 Comments

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே, வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழமையாக காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு வந்து ராணுவ பணியில் சேருபவர்கள் என்று கூறப்படுகிறது. சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக  ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். […]

வட அமெரிக்கா

எயார் கனடா விமான சேவை நிறுவனம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு

  • April 14, 2024
  • 0 Comments

இஸ்ரேலுக்கான விமான சேவையை ரத்து செய்வதாக எயார் கனடா விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. கனடாவின், ரொறன்ரோவிலிருந்து இஸ்ரேலின் தெல் அவீவிற்கு பயணம் செய்யவிருந்த விமானம் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிராந்திய வலயத்தில் நிலவி வரும் பதற்ற நிலையை கருத்திற் கொண்டு எயார் கனடா நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. எயார் கனடா விமானம் உள்ளுர் நேரப்படி நேற்றைய தினம் பிற்பகல் 4.25 மணிக்கு பியர்சன் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்தது.எனினும் அரசாங்கத்தின் பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையில் விமான […]

இலங்கை

பலாங்கொடையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் படுகொலை

  • April 14, 2024
  • 0 Comments

பலாங்கொடை – பெட்டிகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு மரணித்தார். மதுபான விருந்து ஒன்றின் போது இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தீவிரமடைந்து இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொலை தொடர்பாக 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.