பதவியை தக்கவைப்பாரா அர்ச்சுனா? – வழக்கு ஒத்திவைப்பு
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓசல ஹெரத் தாக்கல் செய்த இந்த மனு, இன்று (02) மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மகேன் கொப்பல்லவவின் முன் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டதரணி னுவின் விசாரணைக்கு மிக விரைவில் ஒரு தேதியை வழங்குமாறு நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்தார்.
அதேசமயம், எதிர்வாதி அர்ச்சுனா சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனானி தயரத்ன, அக்கோரிக்கைக்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அதன்படி, சம்பந்தப்பட்ட மனுவின் விசாரணையை ஆகஸ்ட் 31 ஆம் திகதி அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவர் அரச மருத்துவராக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளின்படி, ஒரு அரசாங்க ஊழியரை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுப்பது சட்டத்திற்கு முரணானது மற்றும் அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவராக்குகிறது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





