அயர்லாந்தில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – பலரின் நிலை கவலைக்கிடம்
அயர்லாந்தில் நெடுஞ்சாலையில் பயணித்த கார் ஒன்று மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், நான்கு பேர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை கில்டேர் கவுன்டியில் ( Kildare ) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் காயமடைந்த நால்வரில் குழந்தையொன்றும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். அக்குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரண்டாவது காரின் பெண் ஓட்டுநர் மற்றும் முன் இருக்கைப் பயணி ஆகிய இருவரும் கவலைக்கிடமான நிலையில் , டல்லாக்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் Tallaght University Hospital அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம் பின் இருக்கையில் பயணித்த 20 வயதுடைய பெண் ஒருவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




