இந்தியா

மகாராஷ்டிராவில் பிறந்தநாள் கேக்கை உட்கொண்ட 07 பேர் மருத்துவமனையில் அனுமதி

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தநாள் கேக்கை உட்கொண்ட 07 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளின்படி, அந்தக் குழுவினருக்கு உணவு நஞ்சூட்டல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, பிறந்தநாள் விழாவில் இருந்த அனைத்து உணவு மற்றும் பானங்களும் சுகாதார அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டன.

அதில், பிறந்தநாள் கேக்கில் இறந்த பல்லி ஒன்று கண்டெடுக்கப்பட்டது.அதன்படி, கேக்கைத் தயாரித்த கடை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், உணவு நஞ்சூட்டலால் பாதிக்கப்பட்ட அனைவரின் உடல்நிலையும் தற்போது குணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயினும், இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் பேக்கரிப் பொருட்களின் தர நிர்ணயங்கள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே