இந்தியா

இந்தியாவில் இருமல் மருந்துகளை வாங்குவோருக்கு எச்சரிக்கை – பற்றுச்சீட்டு அவசியம்

  • June 17, 2026
  • 0 Comments

இந்திய அரசாங்கம் இருமலுக்கான மருந்துகளை வாங்கும்போது மருத்துவரின் பற்றுச்சீட்டு அல்லது பரிந்துரை சீட்டு  காண்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை பயன்படுத்திய பல குழந்தைகள் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு தேவையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட மருந்துகளின் பட்டியலில் இருந்து இருமல் மருந்துகளை நீக்குவதற்காக சுகாதார அமைச்சகம் விதிகளைத் திருத்தியுள்ளது. இந்த விதிகள் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளன. பல நாடுகளில் குழந்தைகள் உயிரிழந்ததற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளே காரணம் […]

உலகம்

பாலைவனத்தில் வெள்ளப்பெருக்கு – சீன மக்களுக்கு எச்சரிக்கை!

  • June 12, 2026
  • 0 Comments

காலநிலை மாற்றம் காரணமாக  இந்த கோடைக்காலப் பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் மிகப்பெரிய பாலைவனமான சின்ஜியாங்கின் தக்லமக்கானில்  (Taklamakan)  இந்த ஆண்டின் முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து இன்று இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2021 முதல் தக்லமக்கான் பாலைவனத்தில் இதேபோன்ற வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டிருந்தாலும், அவை பொதுவாக வெப்பநிலை உச்சத்தில் இருக்கும் ஆகஸ்ட் மாதத்தில் நிகழ்கின்றன. ஆனால் இம்முறை முன்கூட்டியே ஏற்பட்டுள்ளன. ரொய்ட்டர்ஸ் காலநிலை கண்காணிப்பு அறிக்கையின்படி, ஜூன் 12 அன்று, […]

இலங்கை

போலி குறுஞ்செய்திகள் மூலம் மோசடி : சாரதிகளுக்கு எச்சரிக்கை!

  • May 28, 2026
  • 0 Comments

போலி குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பி ஓட்டுநர்களிடமிருந்து பணத்தையும் தனிப்பட்ட தரவுகளையும் பெற்று மோசடி செய்யும் குற்றவாளிகள் தொடர்பில்  இலங்கை கணினி அவசரகால பதிலளிப்புக் குழு (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. சாலைகளில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிந்துள்ளதாகக் கூறி, காவல்துறையிடம் இருந்து வருவதுபோன்ற போலி குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாகவும், இதற்கு பதிலளிக்கும்போது தனிப்பட்ட தரவுகள், மற்றும் பணமோசடியை குற்றவாளிகள் மேற்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவை, அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ GovPay கட்டண முறையை மிகவும் ஒத்திருக்கும் வகையில் […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் மே மாதத்தின் அதிகபட்ச வெப்பநிலை இன்று

  • May 25, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் மே மாதத்தின் அதிகபட்ச வெப்பநிலை இன்று பதிவாகியுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் தகவலுக்கமைய, லண்டனின் ஹீத்ரோ பகுதியில் 32.9°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. மே மாதத்தில் இதற்கு முன் 32.8°C வெப்பநிலை அதிகபட்சமான பதிவானது அதற்கும் முன்னர் தென்மேற்கு லண்டனிலுள்ள புஷி பார்க்கிலும் (Bushy Park) இதே அளவிலான வெப்பநிலை பதிவாகியிருந்தது. இதனிடையே, நேற்றிரவு இதுவரை இல்லாதளவில் அதிக வெப்பமான மே மாத இரவாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் வெப்பமான வானிலை தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு […]

ஐரோப்பா

ஜெலென்ஸ்கியின் எச்சரிக்கை : பெலாரஸுக்கு அணுவாயுதங்களை மாற்றும் ரஷ்யா!!

  • May 21, 2026
  • 0 Comments

ரஷ்யா தனது நட்பு நாடான பெலாரஸுடன் மூன்று நாள் கூட்டுப் பயிற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரஷ்யா அணு ஆயுதங்களை அங்குள்ள சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அணு ஆயுதத் திறன் கொண்ட ஏவுகணைகள் மற்றும் அவற்றின் இரகசிய நகர்வுகளை சோதிக்கும் நோக்கில் இந்த பயிற்சி முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன் இந்தப் பயிற்சிகள், ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளிலும் நடைபெறும். கீவ் மீது ரஷ்யா ஒரு புதிய தரைவழித் தாக்குதலை […]

இந்தியா

மே – 22 வரை தொடரும் ஆபத்து : இந்தியாவின் வட மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

  • May 17, 2026
  • 0 Comments

இந்தியாவின் தலைநகர் டெல்லி உட்பட   வட மாநிலங்களில் வரும் நாட்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கை  மே 22 வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக  ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில் அதி உச்ச வெப்பநிலை பதிவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் வெப்பநிலையானது  40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, […]

இந்தியா செய்தி

சிலிண்டர் விலை அதிகரிப்பை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தும் என காங்கிரஸ் எச்சரிக்கை

  • May 1, 2026
  • 0 Comments

வணிக சிலிண்டரைத் தொடர்ந்து அடுத்ததாக பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா – ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக, இந்தியாவில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ஒரே நாளில் 993 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “பணவீக்கத்தின் தாக்கம் தேர்தல்களுக்குப் பின்னரே உணரப்படும் என்று நான் முன்பே கூறியிருந்தேன். அதன்படி இன்று, […]

அரசியல் இலங்கை செய்தி

பிணையில் வந்தகையோடு என்.பி.பி. அரசுக்கு அர்ச்சுனா சிவப்பு எச்சரிக்கை!

  • December 24, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னும் ஓராண்டுக்குள் கவிழும் என்று கருத்து வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Arjuna). கொழும்பு கோட்டை பொலிஸாரால் இன்று முற்பகல் கைது செய்யப்பட்ட அர்ச்சுனாவுக்கு பிற்பகல் பிணை வழங்கப்பட்டது. பிணையில் வெளிவந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.ஏனைய சபைகளிலும் இந்நிலைமை ஏற்படலாம். முல்லைத்தீவிலும் என்.பி.பி. ஆட்சிக்கு பின்னடைவு […]

இலங்கை

இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • October 13, 2025
  • 0 Comments

இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக  சருமத்தில் சிவத்தல், வியர்வை கொப்புளங்களை ஒத்த சிறிய கொப்புளங்கள் மற்றும் அரிப்பு ஏற்பட்டால் உடனடியாக தோல் மருத்துவரிடம் சிகிச்சை பெறுமாறு கொழும்பு தேசிய மருத்துவமனையின் தோல் மருத்துவர் இந்திரா கஹாவிட்ட  (Indira Kahavita) வலியுறுத்தியுள்ளார். டைனியா வெர்சிகலரால் (Tinea versicolor) பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இவர்களில் கர்ப்பிணித் தாய்மார்களும் கணிசமான அளவில் இருப்பதாக […]

இலங்கை

இலங்கையில் சீரற்ற காலநிலை – சுகாதாரப் பிரிவினர் விடுத்த எச்சரிக்கை

  • October 8, 2025
  • 0 Comments

இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் டெங்கு நோய் வேகமாகப் பரவும் அபாயம் இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நாட்டில் 39,401 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு டெங்குவால் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என நிபுணர் தெரிவித்தார். ஒக்டோபர் மாதத்தில் இதுவரை 431 […]