இந்திய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கொழும்பில் ஆராய்வு
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து இலங்கையும் இந்தியாவும் கலந்துரையாடியுள்ளன. தொழில்அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்திய நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் உள்கட்டமைப்புத் திட்டங்களில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் அவற்றைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி […]













