ஈரானின் ஒருமைப்பாட்டுக்குப் பூரண ஒத்துழைப்பு: ரிஷாத்
ஈரான் மீதான ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் மற்றும் அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டமைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. ஈரானின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்குத் தமது கட்சி பூரண ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். மக்கள் காங்கிரஸ் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:- அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்ட செய்தி ஆழ்ந்த அதிர்ச்சியளிக்கின்றது. இது ஒரு தனிப்பட்ட தலைவரின் மரணம் […]













