இலங்கை செய்தி

ஈரானின் ஒருமைப்பாட்டுக்குப் பூரண ஒத்துழைப்பு: ரிஷாத்

  • March 3, 2026
  • 0 Comments

ஈரான் மீதான ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் மற்றும் அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டமைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. ஈரானின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்குத் தமது கட்சி பூரண ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். மக்கள் காங்கிரஸ் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:- அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்ட செய்தி ஆழ்ந்த அதிர்ச்சியளிக்கின்றது. இது ஒரு தனிப்பட்ட தலைவரின் மரணம் […]

செய்தி

பிரதம நீதியரசர் முல்லைத்தீவு விஜயம்!

  • March 3, 2026
  • 0 Comments

பிரதம நீதியரசர் Chief Justice பிரீத்தி பத்மன் சூரசேன, Preethi Padman Surasena நேற்று (03) முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் செய்தார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்று அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டார். அத்துடன், சட்டத்தரணிகள், பொலிஸ் அதிகாரிகள், மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். நீதிச்சேவையை சேர்ந்த பல அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

இலங்கை செய்தி

ஈரான் உச்ச தலைவர் மறைவு: சம்பாந்துறையில் துக்கம் அனுஷ்டிப்பு!

  • March 3, 2026
  • 0 Comments

அயத்துல்லா அலி காமெனீ அவர்களின் மறைவையொட்டி சம்மாந்துறையில் நேற்று துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. உலக இஸ்லாமிய தலைவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்பட்ட அவர்களின் இழப்பை நினைவுகூரும் வகையில், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அ.அப்னான் தலைமையில் இளைஞர்கள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் பல இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மறைந்த தலைவரின் சேவைகளையும் அவரின் பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்து துக்கம் அனுசரிக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அமைதியான முறையில் நடைபெற்ற இந்நிகழ்வு பிரதேச […]

இலங்கை செய்தி

தூதரகங்கள், சுற்றுலா விடுதிகளுக்கு விசேட பாதுகாப்பு!

  • March 3, 2026
  • 0 Comments

கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்கும் விடுதிகளில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்தே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பயணிகள் அடிக்கடி வரும் விடுதிகள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க பொலிஸ்மா அதிபர், அனைத்து பிரிவுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார். மூத்த பொலிஸ் அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றநிலையினால், வெளிநாட்டு தூதரகங்களை குறிவைத்து தாக்குதல்கள் […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கு போர்: எதிரணி எம்.பிக்கள் கொழும்பில் முகாமிட்டு ஆராய்வு!

  • March 3, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa தலைமையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலுள்ள SL Parliament எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (03) இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அச்சந்திப்பில் பங்கேற்றனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல்தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன. ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் தாக்கங்கள் பற்றியும் பேசப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் […]

இலங்கை செய்தி

இலங்கையிடம் ஈரான் தூதுவர் விடுக்கும் அவசர கோரிக்கை!

  • March 3, 2026
  • 0 Comments

“சர்வதேச சட்ட மீறல்கள் குறித்து இலங்கை மௌனம் காக்க கூடாது.”என்று இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஸ் (Alireza Delkhosh) தெரிவித்தார். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அணிசேரா வெளியுறவுக் கொள்கையை பின்பற்றும் இலங்கை தற்போதைய சூழ்நிலையில், என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் என தூதுவரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இலங்கை ஒரு நடுநிலையான நாடு. எனினும், சர்வதேச சட்ட மீறல் குறித்து இலங்கை அமைதியாக இருக்க வேண்டும் […]

இந்தியா

இந்தியாவுக்கு யுரேனியம் வழங்குகிறது கனடா: ஒப்பந்தம் கைச்சாத்து!

  • March 3, 2026
  • 0 Comments

இந்தியாவின் India அணு மின் உற்பத்திக்குரிய யுரேனியத்தை வழங்குவதற்கு கனடா Canada இணக்கம் வெளியிட்ட நிலையில் இது தொடர்பில் இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. இந்திய பிரதமரின் அழைப்பின் பேரில் கனடா பிரதமர் மார்க் கார்னி Mark Carney கடந்த 27 ஆம் திகதி இந்தியா வந்தார். இந்நிலையில் பயணத்தின் கடைசி நாளான நேற்று பிரதமர் மோடியை புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போது பிரதமர் மோடியும், பிரதமர் கார்னியும் இரு நாட்டு […]

இந்தியா

ஈரான் உச்ச தலைவர் மறைவு: இந்திய கிராமமொன்றில் 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு!

  • March 3, 2026
  • 0 Comments

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி காமேனியின் மறைவுக்கு கர்நாடக மாநிலத்திலுள்ள கிராமமொன்றில் மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அயத்துல்லா அலி காமேனி கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள அலிப்பூர் என்ற கிராமத்துக்கு இரு தடவைகள் வருகை தந்துள்ளார். 1980, 81 காலப்பகுதியிலேயே இவ்விஜயம் இடம்பெற்றது. மேற்படி ஊரில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான ஷியா முஸ்லிம்கள் வாழ்வதால் அவர்களுக்காக சிறப்பு தொழுகை நடத்தினார். அவர் வந்து சென்ற பின்னர், ஈரான் அரசின் உதவியுடன் அலிப்பூரில் காமேனி […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கில் நேரில் களமிறங்கும் அமெரிக்க படைகள்!

  • March 3, 2026
  • 0 Comments

தேவையேற்படும் பட்சத்தில் மாத்திரமே மத்திய கிழக்கில் அமெரிக்க படைகள் நேரடியாகக் களமிறங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்துள்ளார். Saudi Arabia, ரியாத்திலுள்ள அமெரிக்க தூதுரகம்மீது Iran இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்நிலையிலேயே Trump மேற்கண்டவாறு கூறியுள்ளார். அத்துடன், இதற்கான பதிலடி நடவடிக்கை பற்றி அவர் விரைவில் தெரியப்படுத்துவார் எனவும் தெரியவருகின்றது. அமெரிக்க தூதுரகம்மீதான தாக்குதலில் குறைந்த அளவிலான சேதங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் சவூதி பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. […]

உலகம்

சவூதியிலுள்ள அமெரிக்க தூதரகம்மீது ஈரான் தாக்குதல்!

  • March 3, 2026
  • 0 Comments

சவூதி, ரியாத்தில் Riyadh உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு ட்ரோன்கள் மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த இந்த தாக்குதலை சவூதி பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து வளாகத்துக்குள் கரும்புகை சூழ்ந்ததோடு, கட்டிடத்தின் சில பகுதிகள் தீயில் எரிந்தன. தூதரக வளாகத்தில் பரவிய தீ உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ […]

error: Content is protected !!