பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா முகமையான UNRWA-வின் 100 மில்லியன் டாலர் நிதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு உலக நாடுகளுக்கு, ஐ. நா. சபை பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் அவசர அழைப்பு விடுத்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நிதிப் பற்றாக்குறை – பாலஸ்தீன அகதிகளின் வாழ்க்கை ஆபத்தில்

  • July 1, 2026
  • 0 Comments

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா முகமையான UNRWA-வின் 100 மில்லியன் டாலர் நிதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு உலக நாடுகளுக்கு, ஐ. நா. சபை பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் அவசர அழைப்பு விடுத்துள்ளார். குறித்த நிதிப் பற்றாக்குறை காரணமாக மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நன்கொடையாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஐநா செயலாளர் , ” பெரும் நிதிப் பற்றாக்குறை மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் முழுவதும் இந்த முகமையின் பணிகளுக்கு […]

FIFA உலகக்கிண்ண வரலாற்றில் அதிக கோல்களை அடித்தவர்கள் பட்டியலில் பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) தனித்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். செய்தி விளையாட்டு

கோல் வேட்டை: 2ஆவது இடத்துக்கு முன்னேறிய பிரான்ஸ் வீரர்

  • July 1, 2026
  • 0 Comments

FIFA உலகக்கிண்ண வரலாற்றில் அதிக கோல்களை அடித்தவர்கள் பட்டியலில் பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) தனித்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சுவீடன் அணியை வீழ்த்திய பிரான்ஸ் (3-0), காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு (Round of 16) தகுதி பெற்றது. இந்த ஆட்டத்தில் இரண்டு கோல்களை அடித்ததன் மூலம், உலகக்கிண்ணத் தொடர்களில் எம்பாப்பேயின் மொத்த கோல்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 16 கோல்களுடன் இருந்த […]

லாகூர் நகரின் புறநகர்ப் பகுதியான கஹ்னாவில் (Kahna) உள்ள ஒரு தனியார் கல்வி நிலையத்தில் (Tuition Centre) இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உலகம் செய்தி

கூரை இடிந்து விழுந்து 14 சிறுவர்கள் பலி: பாகிஸ்தானில் சோகம்

  • July 1, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகே கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்ததில், அதற்குள் சிக்கி 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லாகூர் நகரின் புறநகர்ப் பகுதியான கஹ்னாவில் (Kahna) உள்ள ஒரு தனியார் கல்வி நிலையத்தில் (Tuition Centre) இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டவர்களில் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களும் அடங்குவர். இந்தக் கட்டிட விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர், மேலும் முதற்கட்ட விசாரணையின் ஒரு பகுதியாக இருவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு நேரப்படி […]

2030-ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்தை இராணுவத்திற்காகச் செலவிட வேண்டும் என்ற நேட்டோ அமைப்பின் இலக்கை எட்ட முடியாமல் போவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

நேட்டோவின் இலக்கை எட்டுமா பிரித்தானியா?

  • June 30, 2026
  • 0 Comments

பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ள புதிய பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் Defence Investment Plan (DIP) , பனிப்போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய நிதி ஒதுக்கீடாக பாதுகாப்புத்துறை நிபுணர்களால் கருதப்படுகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் அணுசக்தித் தடுப்பு முறைகள், நவீன போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்காக சுமார் 270 பில்லியன் பவுண்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் போரின் படிப்பினைகளைக் கொண்டு தன்னியக்க பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்த முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. இருப்பினும், 2030-ஆம் ஆண்டிற்குள் […]

ஜூன் 24 முதல் 30 வரை IMF தூதுக்குழுவினர் கொழும்பிற்கு மேற்கொண்ட விஜயத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இலங்கை செய்தி

இலங்கையின் பொருளாதார மீட்சித் திட்டத்துக்கு IMF பாராட்டு

  • June 30, 2026
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான IMF தூதுக்குழுவினர் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர். இதன்போது, பொருளாதார மீட்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் இலங்கையின் மீளெழுச்சித் திறன் ஆகியவற்றை நாணய நிதியத் தூதுக்குழுவினர் பாராட்டினர். ஜூன் 24 முதல் 30 வரை IMF தூதுக்குழுவினர் கொழும்பிற்கு மேற்கொண்ட விஜயத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் […]

ஈரானின் தோல்வியைக் கொண்டாடும் வகையில் அமெரிக்க அதிகாரி ஒருவர் வெளியிட்ட கருத்துக்கள் விளையாட்டு தர்மத்திற்கு எதிரானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகம் செய்தி

‘ஆடு களத்துக்குள் புகுந்த அமெரிக்க அரசியல்’- ஈரான் கடும் சீற்றம்

  • June 30, 2026
  • 0 Comments

2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை அமெரிக்கா நடத்திய விதம் குறித்து ஈரான் வெளிவிவகார அமைச்சு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இந்த விளையாட்டு நிகழ்வு மிகவும் அரசியல்மயமாக்கப்பட்டதாக அந்நாடு குற்றம் சாட்டியுள்ளதுடன், தங்களது தொழில்நுட்பக் குழுவினருக்கு விசா மறுக்கப்பட்டதை முக்கியப் புகாராக முன்வைத்துள்ளது. மேலும், ஈரான் அணி தங்கியிருந்த இடம் மற்றும் வீரர்களுக்கு வழங்கப்பட்ட வசதிகள் தொடர்பாகப் பல சிக்கல்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கிண்ண தொடரில் இருந்து ஈரான் அணி வெளியேறியதைக் கொண்டாடும் வகையில் அமெரிக்க […]

இலங்கை செய்தி

இலங்கை முதலீட்டு சபைக்கு புதிய தலைவர் நியமனம்

  • June 30, 2026
  • 0 Comments

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் ஏனைய உறுப்பினர்களாக விஷ் கோவிந்தசாமி, ஹர்ஷனி ரந்திலிகம, மங்கள கருணாரத்ன மற்றும் கே. ஏ. விமலேந்திரராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நியமனக் கடிதங்களை, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க , இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.

டேமியன் பெர்னாண்டோ, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான முதுமாணிப்(Master of Defence Studies) பட்டத்தையும், லண்டன் கிங்ஸ் கல்லூரியில் சர்வதேச பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான முதுமாணிப் (Master of Arts in International Security and Strategy) பட்டத்தையும் பெற்றுள்ளார். இலங்கை செய்தி

இலங்கையில் புதிய கடற்படைத் தளபதி நியமனம்

  • June 30, 2026
  • 0 Comments

இலங்கை கடற்படையின் பதவி நிலை பிரதானியாகக் கடமையாற்றிய ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுக்கு, வைஸ் அட்மிரல் பதவிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, இலங்கை கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார். இந்த நியமனம் ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய கடற்படைத் […]

" என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள், போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்" என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். இலங்கை செய்தி

” எல்லாமே பொய்” – சிறைச்சாலை பஸ்சுக்குள் இருந்து சீறிய பிள்ளையான்

  • June 30, 2026
  • 0 Comments

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள், போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்” என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அவரை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் அ.தர்சினி இன்று உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலை வாகனத்துக்குக் கொண்டுசெல்வதற்காக பிள்ளையான் சிறைச்சாலை பஸ்சுக்குள் ஏற்றப்பட்டார். சிறைச்சாலை பஸ்சுக்குள் இருந்த […]

srilankalatestnews,SrilankaLatestNews,srilankanews,srilankatamilnewstoday, newstoday,news,australianews,australia,todaynews,latestnews,bestnews செய்தி விளையாட்டு

ஈரான் வீரர்களை நெகிழ வைத்த மெக்சிகோ மக்கள்

  • June 30, 2026
  • 0 Comments

அரசியல் பதற்றங்கள் மற்றும் கடுமையான நெருக்குவாரங்களுக்கு மத்தியில் உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் பங்கேற்ற ஈரான் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், மெக்சிகோ நாட்டு மக்களின் அன்பால் நெகிழ்ச்சியோடு விடைபெற்றுள்ளது. 2026 உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் நாக்-அவுட் (Knockout) சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்து ஈரான் அணி (Team Melli) தொடரிலிருந்து துரதிர்ஷ்டவசமாக வெளியேறியுள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் அல்ஜீரியாவுக்கு எதிராக ஆஸ்திரியா பெற்ற இறுதிநேர சமநிலை (Equaliser) காரணமாக, ஈரான் அணியின் அடுத்த சுற்று […]