இலங்கை செய்தி

சாய்ந்தமருது பகுதியில் கடலில் மூழ்கியது மீன்பிடி இயந்திரப் படகு!

  • March 6, 2026
  • 0 Comments

இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் நங்கூரத்தில் இணைக்கப்பட்டு தரித்திருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகொன்று கடலில் மூழ்கியுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சாய்ந்தமருது பிரதேச கடல் பகுதியில் இச் சம்பவம் வியாழக்கிழமை(5) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த படகினை மீட்டு கடற்கரைப் பகுதிக்கு இழுத்து கொண்டு வருவதற்கான முயற்சிகள் பல தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மூழ்கிய படகு சுமார் ஒரு கோடிக்கும் மேல் பெறுமதியானதுடன் கனரக வாகனத்தின் உதவியுடன் கரையை நோக்கி இழுக்கப்பட்டது. கடற்படையின் உதவியும் […]

உலகம்

ஏவுகணை தாக்குதல்: குவைத்திலுள்ள தூதரகத்தை மூடியது அமெரிக்கா!

  • March 6, 2026
  • 0 Comments

குவைத்தில் உள்ள தமது நாட்டு தூதுரகத்தை அமெரிக்கா மூடியுள்ளது. அங்கிருந்து அனைத்து பணியாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். தூதரகத்தில் உள்ள ரகசியத் தரவுகள் மற்றும் கோப்புகளை முழுமையாக அழிக்குமாறு தூதரக ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குவைத் வான்பரப்பில் ஊடுருவிய ஏவுகணைத் தாக்குதலை அந்த நாட்டு இராணுவம் முறியடித்ததைத் தொடர்ந்து இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வான்வழித் தாக்குதலால் சில வாகனங்கள் சேதமடைந்தாலும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அமெரிக்கா தனது பணியாளர்களின் […]

உலகம்

ஹார்முஸ் நீரிணை வழி முடக்கம்: ஈரானிடம் பாதுகாப்பு கோருகிறது சீனா!

  • March 6, 2026
  • 0 Comments

தமது நாட்டு கப்பல்களுக்குப் பாதுகாப்பு கோரி ஈரானுடன் சீனா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் ஹார்முஸ் நீரிணை வழியாக எரிசக்தி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இதற்குரிய பேச்சு இடம்பெறுகின்றது. உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை வகிக்கும் இப்பாதையில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் முடங்கியுள்ளதால், எரிசக்தி விலைகள் சர்வதேச அளவில் அதிகரித்துள்ளன. இந்த மோதலில் ஈரான் மீதான தாக்குதல்களைச் சீனா கண்டித்துள்ளதுடன், தனது வர்த்தக நலன்களைப் பாதுகாக்க ஈரானுடனான உறவை […]

இலங்கை செய்தி

இஸ்ரேல், ஈரான் வெளிவிவகார அமைச்சர்களுடன் விஜித ஹேரத் பேச்சு!

  • March 6, 2026
  • 0 Comments

  இஸ்ரேல் Israel மற்றும் ஈரான் Iran ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijith Herath பேச்சு நடத்தியுள்ளார். தொலைபேசி ஊடாகவே நேற்று இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான தகவல்களை தனது எக்ஸ் தள பக்கத்தில் அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்டுள்ளார். இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிதியோன் சார் உடனான கலந்துரையாடலின்போது, அந்நாட்டிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புக்குரிய உத்தரவாதம் வழங்கப்பட்டது என அமைச்சர் விஜித […]

இந்தியா செய்தி

ஈரான் போர்க்கப்பல் மூழ்கடிப்பு: இந்திய கடற்படை கூறுவது என்ன?

  • March 6, 2026
  • 0 Comments

ஈரான் போர்க்கப்பல் Iranian warship மூழ்கிவிட்டது என தகவல் கிடைத்த கையோடு இந்திய கடற்படையும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட சென்றது என அந்நாட்டு கடற்படை Indian Navy அறிவித்துள்ளது. இந்து சமுத்திரத்தில் இலங்கையின் தெற்கு கடற் பரப்புக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் ஈரான் போர்க்கப்பலை நீர்மூழ்கி கப்பல் தாக்குதல்மூலம் அமெரிக்கா மூழ்கடித்தது. கூட்டு கடற்படை பயிற்சியை முடித்துக்கொண்டு இந்தியாவில் இருந்து திரும்பும்வழியிலேயே மேற்படி கப்பல் தாக்குதலுக்கு இலக்கானது. இது தொடர்பில் இந்தியாமீதும் விமர்சன கோணத்தில் கருத்துகள் […]

உலகம் செய்தி

ட்ரம்ப்பை கொல்லுங்கள்: ஈரான் மதகுரு பகிரங்க அழைப்பு!

  • March 6, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி கொல்லப்பட வேண்டும் என ஈரான் மதகுரு ஒருவர் விடுத்துள்ள அழைப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் மூத்த ஷியா மதகுருக்களில் ஒருவரான அயத்துல்லா அப்துல்லா ஜவாதி அமோலியே Ayatollah Abdollah Javadi Amoli அரச தொலைக்காட்சியில் உரையாற்றும்போது இந்த அழைப்பை விடுத்துள்ளார். “நாம் இப்போது ஒரு பெரிய சோதனையின் விளிம்பில் இருக்கிறோம். இந்த ஒற்றுமையை நாம் முழுமையாகப் பாதுகாக்க வேண்டும். யூதர்களின ரத்தம் சிந்தப்பட வேண்டும், ட்ரம்பின் ரத்தம் சிந்தப்பட வேண்டும்.” எனவும் அவர் […]

ஆஸ்திரேலியா உலகம்

” ஈரான் போர்க்கப்பலை தாக்கிய அமெரிக்க நீர்மூழ்கிக்குள் ஆஸ்திரேலிய கடற்படை”

  • March 6, 2026
  • 0 Comments

இந்து சமுத்திரத்தில் ஈரானின் போர்க்கப்பல்மீது அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தும்போது குறித்த நீர்மூழ்கிக்குள் ஆஸ்திரேலிய கடற்படையினரும் இருந்துள்ளனர். இச்சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமது கடற்படை அதில் இருந்ததை ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், மேற்படி தாக்குதலில் ஆஸ்திரேலிய கடற்படை நேரடியாக பங்கேற்கவில்லை எனம் அவர் கூறினார். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையில் இராணுவ கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டணி ஆக்கஸ் AUKUS என அழைக்கப்படுகின்றது. இந்த ஆக்கஸ் திட்டத்தின்கீழ் அணுசக்தியில் இருந்து இயங்கக்கூடிய […]

உலகம்

மத்திய கிழக்கு போரை நிறுத்த சீனா களத்தில்!

  • March 6, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போரை நிறுத்த சீனா களத்தில்! மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு மத்தியஸ்தம் வகிப்பதற்கு தாம் தயார் என சீனா அறிவித்துள்ளது. சீனாவின் இந்த அறிவிப்பானது போரில் புதிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வகையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரானைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் ஏவுகணை உற்பத்தி மையங்கள், அணு சக்தி மையங்களை குறி வைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி […]

இலங்கை செய்தி

“ஈரான் கப்பலை இலங்கை பொறுப்பேற்றது தைரியமான மனிதாபிமான முன்னெடுப்பு”

  • March 6, 2026
  • 0 Comments

ஈரான் கப்பலை இலங்கை பொறுப்பேற்றமையானது தைரியமான மனிதாபிமான முன்னெடுப்பாகும் – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதியின் பங்கேற்புடன் நேற்றிரவு நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் ஜனாதிபதி குறிப்பிட்டார். இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியவை வருமாறு, ” தற்போதைய மத்திய கிழக்கு மோதலின் போதும் சர்வதேச ரீதியிலான எந்தவொரு மோதல்களின் போதும் நாம் நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டிலே இருந்தோம். எமது நிலம், எமது கடற்பரப்பு, எமது வான் பரப்பு என்பவற்றை மோதல்களின் போது […]

இலங்கை செய்தி

ஈரான் தூதரகத்துக்கு சென்று அனுதாபம் பகிர்ந்தார் ரிஷாட்!

  • March 5, 2026
  • 0 Comments

ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி காமெய்னியின் மறைவை முன்னிட்டு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தனது ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, இன்று (05) கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர், அங்குள்ள தூதுவர். அலிடெர்ஷா டெல்கொஷ்வை சந்தித்து தனது அனுதாபத்தைத் பகிர்ந்துகொண்டதுடன், இரங்கல் பதிவேட்டிலும் தனது இரங்கல் செய்தியை பதிவு செய்தார். இந்த விஜயத்தின் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட […]

error: Content is protected !!