‘ஆடு களத்துக்குள் புகுந்த அமெரிக்க அரசியல்’- ஈரான் கடும் சீற்றம்
2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை அமெரிக்கா நடத்திய விதம் குறித்து ஈரான் வெளிவிவகார அமைச்சு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
இந்த விளையாட்டு நிகழ்வு மிகவும் அரசியல்மயமாக்கப்பட்டதாக அந்நாடு குற்றம் சாட்டியுள்ளதுடன், தங்களது தொழில்நுட்பக் குழுவினருக்கு விசா மறுக்கப்பட்டதை முக்கியப் புகாராக முன்வைத்துள்ளது.
மேலும், ஈரான் அணி தங்கியிருந்த இடம் மற்றும் வீரர்களுக்கு வழங்கப்பட்ட வசதிகள் தொடர்பாகப் பல சிக்கல்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கிண்ண தொடரில் இருந்து ஈரான் அணி வெளியேறியதைக் கொண்டாடும் வகையில் அமெரிக்க அதிகாரி ஒருவர் வெளியிட்ட கருத்துக்கள், விளையாட்டு தர்மத்திற்கு எதிரானவை.
இத்தகைய நடவடிக்கைகள் ஒரு சர்வதேசப் போட்டியை நடத்துவதற்கான அடிப்படைப் பண்புகளை அமெரிக்கா மீறியுள்ளதைக் காட்டுகிறது என ஈரான் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.





