காசா நிவாரணக் குழுவினர் மீதான இஸ்ரேலின் இழிவான செயல்: வலுக்கிறது எதிர்ப்பு!
காசா பகுதிக்கு நிவாரணப் பொருட்களுடன் சென்ற தன்னார்வ குழுவினரை (Flotilla activists) இஸ்ரேல் இராணுவம் சிறைபிடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் மிகக் கொடூரமான முறையில் நடத்தப்படும் வீடியோவை இஸ்ரேலின் அமைச்சர் இதாமர் பென்-க்வீர் (Itamar Ben-Gvir) தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். Welcome to Israel என்ற தலைப்புடன் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான சர்வதேச சமூக ஆர்வலர்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில், முழங்காலிட்டு, […]













