இலங்கை செய்தி

திறைசேரி செயலாளர் ராஜினாமா? அரசு கூறுவது என்ன?

  • May 2, 2026
  • 0 Comments

திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை பதவியிலிருந்து நீக்குவது குறித்து அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் டொலர் திறைசேரி பணம், இணைய உடுருவிகளால் திருடப்பட்ட சம்பவம் இலங்கை அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டுள்ளது. குறிப்பாக திறைசேரி செயலாளரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எதிரணிகள் வலியுறுத்திவருகின்றன. இந்நிலையிலேயே தேசிய மக்களின் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் […]

உலகம் செய்தி

தென்கொரியா, ஈரான் வெளிவிவகார அமைச்சர்கள் மந்திராலோசனை!

  • May 2, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் தென்கொரிய ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசிமூலம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஈரான்மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடுத்த போர் ஆக்கிரமிப்பு குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர். அத்துடன், இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழல் தொடர்பிலும் இரு நாட்டு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர். அதேவேளை, நிரந்தர போர் நிறுத்தத்துக்கான ராஜதந்திர நகர்வுகளுக்கு தென்கொரியா ஆதரவளிக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.  

உலகம் செய்தி

ஈரானிடம் எண்ணெய் கொள்முதல் செய்த சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

  • May 2, 2026
  • 0 Comments

ஈரானிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்த ஐந்து சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீன வர்த்தக அமைச்சு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன், அமெரிக்காவின் மேற்படி தடைகளை முடக்குவதற்கான தடை உத்தரவு ஒன்றையும் சீனா பிறப்பித்துள்ளது. சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவின் இந்த அத்துமீறிய தலையீட்டைத் தடுப்பதே சீனாவின் இந்த அதிரடி நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் எனக் கூறப்படுகின்றது. பெய்ஜிங்கின் இந்த உத்தரவு எவ்விதம் நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்து இன்னும் […]

உலகம் செய்தி

அடங்க மறுக்கும் இஸ்ரேல்: காசாவில் ஊழித்தாண்டவம்!

  • May 2, 2026
  • 0 Comments

போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது. கடந்த 24 மணிநேரத்துக்குள் இஸ்ரேல் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காசாமீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் கடந்த 2025 ஒக்டோபரில் போர்நிறுத்த ஏற்படுத்தப்பட்டது. எனினும், இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்களை நடத்திவருகின்றது. இஸ்ரேலின் தாக்குதல்களால் இதுவரையில் 72, 600 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ச்சியான இந்த வன்முறைச் சம்பவங்கள் அப்பகுதியில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

உலகம் செய்தி

ஈரானில் இரு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இணைய முடக்கம்!

  • May 2, 2026
  • 0 Comments

ஈரான் அரசு அமுல்படுத்தியுள்ள இணைய முடக்கம் இரு மாதங்களுக்கு மேலாக நீடிக்கின்றது. 64 ஆவது நாளாக நீடிக்கும் இத்தடையால் மக்களின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அந்நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாடுகளைத் தகர்க்கச் சிலர் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கருவிகளைப் பயன்படுத்தினாலும், அது பெரும் அபாயத்தை உள்ளடக்கியுள்ளது. இத்தகைய கருவிகளை வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது ஈரானில் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்றுத் தரக்கூடிய குற்றமாகக் கருதப்படுகிறது. இணையக் கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ், இந்தத் தடையால் ஈரான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை […]

உலகம் செய்தி

ட்ரம்ப் நிர்வாகத்தை தட்டிக்கேளுங்கள்: அமெரிக்க மக்களிடம் ஈரான் கோரிக்கை!

  • May 2, 2026
  • 0 Comments

ஈரான்மீது அமெரிக்க அரசாங்கம் தொடுத்துள்ள போரை அந்நாட்டு மக்கள் தட்டிக்கேட்க வேண்டுமென ஈரான் வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் தாக்குதலானது எவ்வித தூண்டுதலும் இன்றி நடத்தப்பட்ட ஒரு சட்டவிரோத ஆக்கிரமிப்பாகும் என ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Esmaeil Baqaei சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்பதே ஈரானின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது. இதனை வலியுறுத்தியே ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தனது எக்ஸ் தளத்தில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார். அமெரிக்காவிற்கு எதிராக […]

அரசியல் செய்தி

மலையகத் தமிழர்களுக்கான காணி உரிமையும், மும்முனைச் சமரும்!

  • May 2, 2026
  • 0 Comments

மும்மூர்த்திகள் இணைந்து செயல்படுவது பிரபஞ்சத்திற்கு நன்மை பயக்கும் என்பது ஐதீகம். மும்மூர்த்திகளின் ‘சங்கமமானது’ எப்போதும் சாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் எனப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மும்மூர்த்திகளில் ஒருவரான சிவனை ஓரம் தள்ளிவிட்டுத் தக்கன் செய்த யாகம் தோல்வியிலேயே முடிந்தது என ஆன்மீக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவலோகத்தில் நன்மைகள் நடப்பதற்கு மும்மூர்த்திகளின் ஐக்கியம் எவ்வளவு முக்கியமோ, அதுபோல்தான் மலையகத் தமிழர்களுக்குரிய அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலையை வென்றெடுப்பதற்கும் ‘முத்தரப்புகளின்’ சங்கமம் காலத்தின் கட்டாயத் தேவையாகும். அதாவது மலையக அரசியல்வாதிகள், […]

உலகம் செய்தி

ட்ரம்புக்கு எதிராக திரும்பிய தீவிர விசுவாசி!

  • May 2, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா நிதி உதவி வழங்குவதை அமெரிக்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபருமான Marjorie Taylor Greene கண்டித்துள்ளார். லெபனானில் நடக்கும் கொடூரங்களை சுட்டிக்காட்டியுள்ள அவர், தாக்குதல்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், தற்போது ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கையை வெளிப்படையாக விமர்சித்துவருகின்றார். எப்ஸ்டீன் ஊழல் மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இவர்களுக்கிடையேயான அரசியல் உறவு முறிந்து போனது. இவரின் இந்த […]

உலகம் செய்தி

போர் எந்நேரத்திலும் தொடங்கலாம்!

  • May 2, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போர் மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. சர்வதேச ஒப்பந்தங்களை அமெரிக்கா மதிப்பதில்லை என்பதால், அந்நாடு எப்போது வேண்டுமானாலும் தாக்குதலைத் தொடங்கலாம் என்று ஈரான் கருதுகின்றது. அமெரிக்க அதிகாரிகளின் தற்போதைய கருத்துக்கள் வெறும் அரசியல் நாடகம் மற்றும் தங்களின் பொருளாதார நலன்களைக் காப்பதற்கான முயற்சி என்று ஈரான் ராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் எந்தவொரு ஆக்ரோஷமான நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தங்களது ஆயுதப் படைகள் முழு தயார் நிலையில் இருப்பதாக […]

உலகம் செய்தி

60 நாள் கெடுவை முடக்கிய தற்காலிக போர் நிறுத்தம்!

  • May 2, 2026
  • 0 Comments

“ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்தமானது, போருக்கான நாடாளுமன்ற அனுமதியைப் பெறுவதற்கான 60 நாள் காலக்கெடுவை நிறுத்திவைக்கிறது.” இவ்வாறு அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் விளக்கமளித்துள்ளார். ஈரான்மீதான ராணுவ நடவடிக்கையை கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா ஆரம்பித்தது. போர் தொடுப்பதற்குரிய கட்டளையை பிறப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும் அது தொடர்பில் 60 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும். இதற்கமைய கடந்த மார்ச் 2 ஆம் திகதி இது தொடர்பில் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ட்ரம்ப் […]

error: Content is protected !!