நடு கடலில் தீப்பிடித்து எரிந்த படகு – நீரில் தத்தளித்த நூற்றுக்கணக்கானோர் மீட்பு
ஆங்கிலக் கால்வாயில் பயணித்த படகு ஒன்று தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த படகில் 157 பேர் பயணித்த அவர்கள் அனைவரும் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரிட்டிஷ் எல்லைப் பாதுகாப்புப் படையின் இரண்டு படகுகள் மற்றும் ஒரு RNLI உயிர் காக்கும் படகின் உதவியுடன் பிரெஞ்சு கப்பல்கள் மூலம் 157 பேரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தோர், மேலும் ஆபத்துகளைத் தவிர்ப்பதற்காக அவர்களை மீட்புப் படகுகளில் வலுக்கட்டாயமாக ஏற்ற வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டதாகவும், தற்போது அவர்கள் பூலோன்-சுர்-மெர் (Boulogne-sur-Mer) பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவர்களில் 54 பேர் பிரித்தானிய கப்பல்கள் மூலம் பிரான்சுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இந்நடவடிக்கையானது புலம்பெயர்ந்தோரை பிரான்ஸ் அல்லது பெல்ஜியத்திற்குத் திருப்பி அனுப்பும் ‘ஆபரேஷன் ஃபோர்ட்ரஸ்’ (Operation Fortress’) என்ற கோட்பாட்டிற்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




