போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்தது ஹிஸ்புல்லா: படைகளை வாபஸ்பெற இஸ்ரேல் மறுப்பு!
லெபனானில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்க தலையீட்டுடன் முன்வைக்கப்பட்ட புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு நிராகரித்துள்ளது. இந்நிலையில் லெபனானில் இருந்து தங்கள் படைகளைத் திரும்பப் பெறப் போவதில்லை என்று இஸ்ரேலும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவுடன் எந்தவொரு அமைதி ஒப்பந்தத்தையும் மேற்கொள்வதற்கு லெபனானில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை ஈரான் ஒரு முக்கிய நிபந்தனையாக விதித்துள்ளது. மேலும், லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், தான் நேரடியாகப் போரில் […]













