ஹார்முஸ் நீரிணை: சர்வதேச மாநாட்டை நடத்த தயாராகும் பிரான்ஸ், பிரிட்டன்!
“ஹார்முஸ் நீரிணை வழியாக தடையற்ற, பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதிசெய்வதற்குரிய சர்வதேச முயற்சிக்கு பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் தலைமை வகிக்கும்.” இவ்வாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரன் Emmanuel Macron தெரிவித்தார். தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்தள பக்கத்திலேயே அவர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு, “மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் மோதலுக்கு, இராஜதந்திர வழியில் நீடித்த தீர்வை காண அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். தீர்வு திட்டமானது […]













