அரசியல் இலங்கை செய்தி

வடக்கு மாகாணத்துக்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்குவது ஆபத்து: மஹிந்த அணி கொதிப்பு!

வடக்கு மாகாணசபைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் தேசத்துரோக நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கமாட்டார் என நம்புகின்றோம் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் பிரச்சினை இல்லை. ஆனால் தேர்தலை நடத்தி வடக்கு மாகாணசபைக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கினால்தான் பிரச்சினை ஏற்படும்.

இலங்கையில் இதுவரை ஆட்சிபுரிந்த எந்தவொரு ஜனாதிபதியும் இந்த வேலையை (பொலிஸ், காணி அதிகாரம் பகிர்வு) செய்யவில்லை. தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இதே அணுகுமுறையை பின்பற்றுவார் என நம்புகின்றோம்.

சிலவேளை பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கினால் இந்நாடு பெடரல் ராஜ்யமாகும். அவ்வாறு நடந்தால் இதுவரைகாலமும் பாதுகாத்துவந்த ஒற்றையாட்சி முறைமை இல்லாமல்போகும். இது தேசத்துரோக நடவடிக்கையாகவே அமையும். இவ்வாறானதொரு செயலை ஜனாதிபதி செய்வார் என நம்பவில்லை.” – என்றார் சரத் வீரசேகர.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!