செய்தி விளையாட்டு

ஆஸி.அணியை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று, 3 போட்டிகளைக் கொண்ட தொடரை 2 – 1 என்ற அடிப்படையில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.

இரு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 1-1 என வென்று தொடரில் சமனிலை வகித்தன.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி லாகூரில் நேற்று நடைபெறுகிறது.

நாணய சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடியது.

ஆஸ்திரேலிய அணி 42 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும், ஷதாப் கான், அப்ரார் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.

41.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

இரு அணிகளிலும் பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டிருந்தனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!