உலகம் செய்தி

ஈரான் கப்பலை சிறைபிடித்தது அமெரிக்கா!

  • April 20, 2026
  • 0 Comments

ஈரானிய சரக்குக் கப்பலான டூஸ்கா (Touska) அமெரிக்கக் கடற்படையால் வளைகுடாப் பகுதியில் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கடல்வழித் தடையை மீற முயன்ற இந்தக் கப்பலின் இயந்திரப் அறையைச் சேதப்படுத்தி அமெரிக்கப் படைகள் அதைக் கைப்பற்றியுள்ளன. இந்தச் செயலை ஆயுதம் ஏந்திய கொள்ளைச் சம்பவம் என்று ஈரான் விமர்சித்துள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தைக்காகத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழு பாகிஸ்தான் செல்லவிருந்த நிலையில் இந்த மோதல் வெடித்துள்ளது. ஈரான் மற்றும் […]

இலங்கை செய்தி

சீதையம்மனை வழிபட நுவரெலியா செல்கிறார் இந்திய துணை ஜனாதிபதி!

  • April 20, 2026
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இன்று (20) நுவரெலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்திய உதவியுடன் நுவரெலியாவில் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்களை அவர் பார்வையிடவுள்ளார். மக்களையும் சந்திக்கவுள்ளார். நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் வழிபாட்டிலும் ஈடுபடவுள்ளார். இலங்கைக்கு நேற்று பயணம் மேற்கொண்ட இந்திய துணை ஜனாதிபதி இன்று மாலை தாயகம் திரும்புவார்.

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் ‘Yellow Line’ கட்டுப்பாட்டுப் பகுதியை உருவாக்கியது இஸ்ரேல்!

  • April 18, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய இராணுவம் தெற்கு லெபனானில் ‘மஞ்சள் கோடு’ (Yellow Line) என்ற புதிய எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை உருவாக்கியுள்ளது. காசா பகுதியில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பிரிவினையைப் போலவே, இந்த எல்லைக்கோடு லெபனானில் இஸ்ரேலியப் படைகளுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையிலான இடைவெளியைத் தீர்மானிக்கிறது. போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்தாலும், இந்த எல்லையைத் தாண்டி வரும் நபர்கள் அச்சுறுத்தலாகக் கருதப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இராணுவம் எச்சரித்துள்ளது. அண்மையில் இந்த எல்லையை மீறியதாகக் கூறப்படும் ஆயுததாரிகள் […]

அரசியல் இலங்கை செய்தி

ஒற்றுமைக்கான முயற்சியை தகர்த்தது தமிழ்க் காங்கிரஸ்: தமிழரசுக் கட்சி விசனம்!

  • April 18, 2026
  • 0 Comments

தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையே தீர்வு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சியை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி தகர்த்திருக்கின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி கடும் விசனம் வெளியிட்டுள்ளது. இந்த ஒற்றுமை முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவைக்கு ‘புதிய அரசியல் யாப்பு வரைவுக்கான இணக்கப்பாடு’ என்ற தலைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானமும், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் ஒப்பமிட்டு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் முழு விவரம் வருமாறு:- […]

இலங்கை செய்தி

“மன்னாரில் மணல் அகழ்வு அனுமதி பத்திரங்கள் இடைநிறுத்தம்”

  • April 18, 2026
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்ட மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களை உடனடியாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்தப் பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்படும் மிகப்பெரிய முறைகேடுகள் குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (C.I.D.) விசாரணைகளுக்குப் பாரப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் மணல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பான மாவட்ட மட்டத்திலான விசேட கூட்டம், மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் இன்று (18) மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் […]

இலங்கை செய்தி

அரசியல் தீர்வு திட்ட முயற்சியை குழப்பியடிக்காதீர்: சுரேஷ் கோரிக்கை!

  • April 18, 2026
  • 0 Comments

பொதுத்தீர்வு ஆவணத்தை உருவாக்குவதற்கான தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஐக்கிய முயற்சியை முறியடிக்க வேண்டாம் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக புதிய அரசியல் சாசனத்திற்கு முன் வைக்கப்பட வேண்டிய பொதுத் தீர்வு ஆவணத்தை உருவாக்கும் கூட்டு நடவடிக்கையை தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் ‘ஈழத் தமிழர் அரசியல் அமைப்பு […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்!

  • April 18, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையை, ஈரான் ராணுவம் மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. ஈரான் அரச ஊடகங்கள் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நடவடிக்கை தொடர்வதாலேயே ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது எனக் கூறப்படுகின்றது. அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கையை கடல் கொள்ளை என ஈரானிய புரட்சிகர காவல் படை விமர்சித்துள்ளது. தமது துறைமுகங்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள தடையை எதிர்த்து, இப்பாதையை மூடுவதாக ஈரான் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஹார்முஸ் நீரிணையை ஈரான் நேற்று மீண்டும் திறந்தது. […]

உலகம் செய்தி

வான்பரப்பை மீண்டும் திறந்தது ஈரான்!

  • April 18, 2026
  • 0 Comments

சர்வதேச விமான போக்குவரத்துக்காக தமது வான்பரப்பை ஈரான் மீண்டும் திறந்துள்ளது என அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை காரணமாக கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி வான் பரப்பை ஈரான் மூடியது. பாதுகாப்பு கருதி இவ்வாறு மூடப்பட்டிருந்த வான்வழிப் பாதைகள், தற்போது பகுதி அளவில் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. குறிப்பாக, ஈரானின் கிழக்குப் பகுதியில் உள்ள வான்வழிப் பாதைகள் மற்றும் சில முக்கிய விமான நிலையங்கள் வழியாகப் பயணங்கள் படிப்படியாகத் […]

உலகம் செய்தி

சீன ஜனாதிபதியுடனான சந்திப்பை உறுதிப்படுத்தினார் ட்ரம்ப்!

  • April 18, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை மீள திறக்கப்பட்டமை தொடர்பில் சீன ஜனாதிபதி Xi Jinping மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் மே 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் சீனாவில் நடைபெறவுள்ள அந்நாட்டு ஜனாதிபதியுடனான சந்திப்பு சிறப்பானதாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமையும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஈரானில் கச்சா எண்ணெய் கொள்வனவு செய்யும் மிகப்பெரிய நாடான சீனா, தனது தேவைக்கான எண்ணெயில் சுமார் 38 சதவீதத்தை ஹோர்முஸ் […]

உலகம் செய்தி

ஈரான்மீது 10,800 குண்டுவீச்சுத் தாக்குதல்கள்!

  • April 18, 2026
  • 0 Comments

ஈரான்மீது 10,800 குண்டுவீச்சுத் தாக்குதல்களை இஸ்ரேல் படைகள் நடத்தியுள்ளன. இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த ஏப்ரல் 7 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள்ளேயே மேற்படி தாக்குதல்களை நடத்தப்பட்டுள்ளன. அதேவேளை, லெபனானில் 14,900-க்கும் மேற்பட்ட பீரங்கித் தாக்குதல்களையும், 2,500 வான்வழித் தாக்குதல்களையும் இஸ்ரேல் நடத்தியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதல்களில் ஈரான் மற்றும் லெபனானில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.