உலகம்

தென்கொரியாவில் சிறை கைதிகளுக்கு குளிரூட்டும் (AC)வசதியை வழங்குவதற்கு எதிர்ப்பு!

  • June 8, 2026
  • 0 Comments

தென்கொரியாவில் மக்களின் வரிப் பணத்தை பயன்படுத்தி சிறைக்கைதிகளுக்கு  குளிரூட்டும் வசதியை வழங்கும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, சிறைகளில் குளிரூட்டும் அமைப்பை மேம்படுத்துவது என்பது, எளிதில் பாதிக்கப்படக்கூடிய கைதிகளையும் சீர்திருத்த அதிகாரிகளையும் வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு குறைந்தபட்ச நடவடிக்கையாகும் என்று அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. அத்துடன் இந்த திட்டத்திற்கு 1.2 பில்லியன் வோன் ($779,000) செலவாகும் என்று நீதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நியாயப்படுத்திப் பேசிய அமைச்சகம், குளிரூட்டிகள் சிறை அறைகளில் அல்லாமல் நடைபாதைகளில் நிறுவப்படும் என்றும், […]

உலகம்

தென்கொரியாவில் எரிபொருள் உற்பத்தி ஆலையில் விபத்து – ஐவர் பலி!

  • June 1, 2026
  • 0 Comments

தென்கொரியாவின் ரொக்கெட் எரிபொருள் உற்பத்தி ஆலையில், இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளனர். டேஜியோன் நகரில் உள்ள ஹன்வா ஏரோஸ்பேஸ் (Hanwha Aerospace) நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதால், அவர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வெடி விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் […]

உலகம்

தென்கொரியாவில் பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து – மூவர் பலி!

  • May 26, 2026
  • 0 Comments

தென் கொரியத் தலைநகரான சியோலில் பழமையான மேம்பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் 03 பேர் உயரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழமைவாய்ந்த சியோசோமுன் (Seosomun)  மேம்பாலத்தை இடிப்பதற்காக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில்  பாலம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த அவசரகாலப் பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் குறித்த விரிவான விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் செய்தி

ஹோர்முஸ் விவகாரம் – ட்ரம்ப்பை கண்காணித்து வருவதாக தென் கொரியா அறிவிப்பு

  • May 5, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீர்வழிப் போக்குவரத்து குறித்த ட்ரம்பின் கருத்துக்களைக் கண்காணித்து வருவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. “சர்வதேச கடல்வழிப் பாதைகளின் பாதுகாப்பும், கப்பல் போக்குவரத்தின் சுதந்திரமும் சர்வதேச சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும்” என தென் கொரியாவின் ஜனாதிபதி செயலாளர் சோய் சௌங்-ஆ கூறுகிறார். “இது தொடர்பான ஜனாதிபதி ட்ரம்பின் கருத்தை சியோல் கண்காணித்து வருகிறது” என்று சோய் ரொய்ட்டர்ஸிற்கு தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில் நேற்று தென் கொரியாவிற்குச் சொந்தமான கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தைத் […]

உலகம்

தென்கொரிய தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து

  • March 20, 2026
  • 0 Comments

தென்கொரியாவின் Daejeon நகரில் அமைந்துள்ள வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 85 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் சியோலில் இருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குறித்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரெனத் தீ பரவியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், இத்தீ விபத்தில் சிக்கி காயமடைந்த 50 பேர் உடனடியாக மீட்கப்பட்டு […]