உலகம்

வடகொரியாவை இணைக்கும் ரயில் பாதையை புனரமைக்க தென்கொரியா திட்டம்

  • August 5, 2026
  • 0 Comments

2015-ல் தொடங்கப்பட்டு 2016-ல் இடைநிறுத்தப்பட்ட, கியோங்வோன் (Gyeongwon) ரயில் பாதையை புனரமைக்கும் பணியை தென்கொரியா மீண்டும் தொடங்கவுள்ளது. இந்த ரயில் பாதையானது, இறுதியில் வட கொரியாவின் கிழக்கு நகரமான வொன்சானுடன் (Wonsan ) இணைவதையும், இராணுவமயமற்ற மண்டலத்தில் உள்ள அமைதி மற்றும் சூழலியல் சுற்றுலாத் தளங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பியாங்யாங், தென் கொரியாவை ஒரு விரோத நாடாக மறுவரையறை செய்யும் விதமாக, 2024-ல் எல்லை தாண்டிய சாலை மற்றும் ரயில் இணைப்புகளை தகர்த்ததைத் தொடர்ந்து […]

உலகம்

“முதலில் அமைதி” – வடகொரியாவுடன் உறவை புதுப்பிக்க தென்கொரியா முனைப்பு

  • July 23, 2026
  • 0 Comments

வட கொரியாவுடனான உறவில், ‘முதலில் அணு ஆயுத ஒழிப்பு’ என்ற கொள்கையைக் கைவிட்டு, ‘முதலில் அமைதி’ என்ற அணுகுமுறையை தென் கொரியா பின்பற்றுவதாக ஒருங்கிணைப்பு அமைச்சர் சுங் டோங்-யங் (Chung Dong-young)   தெரிவித்துள்ளார். அதே சமயம் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்றதாக மாற்றும் இறுதி இலக்கை அந்நாடு தக்கவைத்துக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அணு ஆயுத ஒழிப்பு என்ற இறுதி […]

உலகம்

வடகொரியாவின் உதவியை நாடிய தென்கொரியா – பின்னணி என்ன?

  • July 13, 2026
  • 0 Comments

வடகொரியா மற்றும் தென்கொரியாவிற்கு இடையே உள்ள கிழக்கு கடல்பகுதியில் தென்கொரிய மாலுமி ஒருவர் காணாமல்போயுள்ளார். கடலோர காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த அதிகாரி காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் வடக்கு எல்லைக் கோட்டைக் கடந்து வட கொரிய கடல் பகுதிக்குள் சென்றிருக்க வாய்ப்புள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் தென்கொரிய அதிகாரிகள் குறித்த மாலுமியை  தேட வடகொரியாவின் உதவியை நாடியுள்ளனர். தற்போது இரு நாடுகளுக்கும் இடையே நேரடித் தொடர்பு இல்லாததால், இந்த வேண்டுகோள் பியோங்யாங்கிற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தென் […]

உலகம்

தென்கொரியாவில் சிறை கைதிகளுக்கு குளிரூட்டும் (AC)வசதியை வழங்குவதற்கு எதிர்ப்பு!

  • June 8, 2026
  • 0 Comments

தென்கொரியாவில் மக்களின் வரிப் பணத்தை பயன்படுத்தி சிறைக்கைதிகளுக்கு  குளிரூட்டும் வசதியை வழங்கும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, சிறைகளில் குளிரூட்டும் அமைப்பை மேம்படுத்துவது என்பது, எளிதில் பாதிக்கப்படக்கூடிய கைதிகளையும் சீர்திருத்த அதிகாரிகளையும் வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு குறைந்தபட்ச நடவடிக்கையாகும் என்று அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. அத்துடன் இந்த திட்டத்திற்கு 1.2 பில்லியன் வோன் ($779,000) செலவாகும் என்று நீதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நியாயப்படுத்திப் பேசிய அமைச்சகம், குளிரூட்டிகள் சிறை அறைகளில் அல்லாமல் நடைபாதைகளில் நிறுவப்படும் என்றும், […]

உலகம்

தென்கொரியாவில் எரிபொருள் உற்பத்தி ஆலையில் விபத்து – ஐவர் பலி!

  • June 1, 2026
  • 0 Comments

தென்கொரியாவின் ரொக்கெட் எரிபொருள் உற்பத்தி ஆலையில், இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளனர். டேஜியோன் நகரில் உள்ள ஹன்வா ஏரோஸ்பேஸ் (Hanwha Aerospace) நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதால், அவர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வெடி விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் […]

உலகம்

தென்கொரியாவில் பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து – மூவர் பலி!

  • May 26, 2026
  • 0 Comments

தென் கொரியத் தலைநகரான சியோலில் பழமையான மேம்பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் 03 பேர் உயரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழமைவாய்ந்த சியோசோமுன் (Seosomun)  மேம்பாலத்தை இடிப்பதற்காக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில்  பாலம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த அவசரகாலப் பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் குறித்த விரிவான விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் செய்தி

ஹோர்முஸ் விவகாரம் – ட்ரம்ப்பை கண்காணித்து வருவதாக தென் கொரியா அறிவிப்பு

  • May 5, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீர்வழிப் போக்குவரத்து குறித்த ட்ரம்பின் கருத்துக்களைக் கண்காணித்து வருவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. “சர்வதேச கடல்வழிப் பாதைகளின் பாதுகாப்பும், கப்பல் போக்குவரத்தின் சுதந்திரமும் சர்வதேச சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும்” என தென் கொரியாவின் ஜனாதிபதி செயலாளர் சோய் சௌங்-ஆ கூறுகிறார். “இது தொடர்பான ஜனாதிபதி ட்ரம்பின் கருத்தை சியோல் கண்காணித்து வருகிறது” என்று சோய் ரொய்ட்டர்ஸிற்கு தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில் நேற்று தென் கொரியாவிற்குச் சொந்தமான கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தைத் […]

உலகம்

தென்கொரிய தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து

  • March 20, 2026
  • 0 Comments

தென்கொரியாவின் Daejeon நகரில் அமைந்துள்ள வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 85 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் சியோலில் இருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குறித்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரெனத் தீ பரவியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், இத்தீ விபத்தில் சிக்கி காயமடைந்த 50 பேர் உடனடியாக மீட்கப்பட்டு […]