தலைமையேற்க Gen Z தலைமுறைக்கு ரணில் அழைப்பு
“தலைமைத்துவத்தை ஏற்பதற்கு ஜென்சி தலைமுறை முன்வர வேண்டும். அதற்குரிய ஆலோசனை, வழிகாட்டல்களை வழங்குவதற்கு தயார்.” என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இளைஞர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாம் எமது காலப்பகுதியில் செய்யக்கூடிய அனைத்தையும் செய்துவிட்டோம். ஜே.ஆர்.காலத்தில் எமக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. எமது சிந்தனைகளுக்கு இடமளிக்கப்பட்டது. முன்னோக்கிச்சென்றோம். எமது காலத்தில் எமது சிந்தனை பற்றி பெற்றோருக்கு புரிதல் இருக்கவில்லை. இன்று காலம் மாறிவிட்டது. […]













