அநுர அரசுக்கு எதிராக ஐ.நாவை நாடியது கூட்டு எதிரணி
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்புவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து ஐ.நாவிடம், மக்கள் கூட்டு எதிர்க்கட்சி முறையிட்டுள்ளது. மக்கள் கூட்டு எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தலதா அத்துகோரள உள்ளிட்டோர் நேற்று கொழும்பில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரே பிரான்சேயைச் சந்தித்து இதுபற்றி முறையிட்டுள்ளனர். நீதித்துறையில் உருவாகி வரும் சூழல் குறித்து ஐ.நா.வின் கவனத்திற்குக் […]













