நாமலை சந்திக்க சிறைக்கு சென்ற ஷிரந்தி ராஜபக்ச
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை சந்திப்பதற்கு, அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச, இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
நாமல் ராஜபக்சவின் தந்தையான மஹிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் நாமலை சந்திப்பதற்கு சிறைக்கு வந்திருந்தார்.
அதேவேளை, நாமல் ராஜபக்சவை பார்வையிடுவதற்கு இன்றைய தினமும் எதிரணி அரசியல் பிரமுகர்கள் சிறைச்சாலைக்கு வந்திருந்தனர்.
நாமல் ராஜபக்சவின் கைது இலங்கை அரசியலில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
எதிர்வரும் 12 ஆம் திகதி நாமல் ராஜபக்ச தலைமையில் அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் நாமல் ராஜபக்ச பங்கேற்காவிட்டாலும், அதனை பிரமாண்டமாக நடத்துவதற்கு எதிரணி அரசியல் பிரமுகர்கள் திட்டமிட்டுள்ளனர்.




