உலகம் செய்தி

பெண் அடிமை வியாபாரம் , IS ஆதரவு: தாயகம் திரும்பிய ஆஸ்திரேலியப் பெண்கள் மீது வழக்கு!

  • May 8, 2026
  • 0 Comments

சிரியா அகதி முகாமில் இருந்து ஆஸ்திரேலியா திரும்பிய மூன்று பெண்கள் மீது தீவிரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதில் ஒருவர் சிரியாவில் இருந்தபோது பெண்ணொருவரை அடிமை விலைக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை மாலை ஆஸ்திரேலியா வந்தடைந்த குழுவில் குறித்த பெண்களும் அவர்களது குழந்தைகளும் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் டமாஸ்கஸிலிருந்து விமானம் மூலம் மெல்போர்ன் மற்றும் சிட்னிக்கு அழைத்து வரப்பட்டனர். ஐ.எஸ். ஆமைப்புடன் தொடர்புடைய குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டனர். இன்று வெள்ளிக்கிழமை அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஐ.எஸ். […]

இலங்கை செய்தி

கைது உத்தரவு: SriLankan Airlines முன்னாள் CEO சடலமாக மீட்பு!

  • May 8, 2026
  • 0 Comments

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளுப்பிட்டிய பகுதியில் உள்ள வீட்டில் வைத்தே இன்று அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும் கொடுக்கல் வாங்கலில், சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்று இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழக அரசியலில் பரபரப்பு: உச்சநீதிமன்றத்தை நாடுகிறார் விஜய்!

  • May 8, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் கட்டாயம் தேவை என்பதை ஆளுநர் மாளிகை மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடிக்கின்றது. மறுபுறத்தில் விஜய்க்கு ஆதரவாக மக்கள் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். அதேபோல திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டும் முயற்சியில் தவெக நிர்வாகிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை […]

அரசியல் இலங்கை செய்தி

அர்ச்சுனா எம்.பி. தீவிரவாதியா? சர்ச்சையைக் கிளப்பும் தேரர்!

  • May 8, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா வைத்தியரா அல்லது தீவிரவாதியா என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். கச்சத்தீவை மட்டும் அல்ல யாழ்ப்பாணத்தையும் தமிழகத்துக்கு கொடுத்து விடுங்கள் என அர்ச்சுனா தெரிவித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ” கச்சத்தீவு மீளப்பெறப்படும் என விஜய் கருத்து வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் நாம் அன்று கதைக்க முற்படும்போது, ஜனாதிபதி கச்சத்தீவுக்கு சென்று, அதனை வழங்கமாட்டோம் என உறுதியளித்தார். ஆனால் நாடாளுமன்ற […]

இலங்கை செய்தி

செம்மணியில் கைக்குழந்தையின் என்புத் தொகுதி மீட்பு!

  • May 8, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியில், கைக்குழந்தை ஒன்றின் என்புத் தொகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளமை பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 10ஆம் நாள் அகழ்வு நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, கைக்குழந்தை ஒன்றின் என்புத் தொகுதி உட்பட நான்கு மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. முன்னதாக அடையாளம் காணப்பட்டவற்றிலிருந்து, ஒரு சிறு குழந்தையின் என்புத் தொகுதி உட்பட இரண்டு மனித என்புத் தொகுதிகள் நேற்று […]

இலங்கை செய்தி

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை உணர்வோடு அணுகவேண்டும்!

  • May 7, 2026
  • 0 Comments

“வட மாகாணத்தைப் பொறுத்தவரை, ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம்’ என்பது வெறும் அரச திணைக்களங்களின் காகிதங்களில் உறங்கும் ஒரு சாதாரண கோப்புச் சார்ந்த விடயமல்ல. இது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் ஆறாத கண்ணீரோடும், பல தசாப்த கால ஏறுமாறான காத்திருப்போடும், விவரிக்க முடியாத வலியோடும் பின்னிப்பிணைந்த ஓர் அதிஉணர்வுபூர்வமான மனிதாபிமானப் பிரச்சினையாகும். அந்த உணர்வோடு அதை அணுகவேண்டும்.” இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு வேலைத்திட்டம், […]

செய்தி

தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உளவுத்துறை எச்சரிக்கை!

  • May 7, 2026
  • 0 Comments

தமிழகத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய உளவுத் துறை , பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் இன்னும் ஆட்சி அமைக்காத நிலையில், சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டியே உளவுத்துறை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க குறைந்தது 118 எம்எல்ஏக்கள் தேவை என்பதால் […]

இலங்கை செய்தி

“போதைப்பொருள் ஒழிப்பு” – ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்பு!

  • May 7, 2026
  • 0 Comments

போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் உட்பட அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகளை விரைவாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுச் சபை இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் மீண்டும் சமூகத்திற்குள் செல்வதைத் தடுத்து, அவற்றை சட்டபூர்வமான நடைமுறைகளின் கீழ் விரைவாக அழிப்பதற்கும், குற்றவாளிகளுக்குத் […]

இலங்கை செய்தி

சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைது!

  • May 7, 2026
  • 0 Comments

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (07) பதிவாகியுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மொரவௌ 10ம் கட்டை பகுதியில் வசித்து வரும் 40 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை, வியட்நாமுக்கிடையில் நாளை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

  • May 7, 2026
  • 0 Comments

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To Lam), இன்று (07) இரவு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தருகிறார். இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 55 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில், 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வியட்நாமுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது விடுத்த அழைப்பிற்கு இணங்க, இந்த வருகை இடம்பெறுகிறது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் […]

error: Content is protected !!