கொலம்பியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 254 ஆக உயர்வு
மேற்கு கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். இடிபாடுகளுக்கு அடியில் எவரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய, அவர்கள் தொடர் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 250 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், நடப்பு நூற்றாண்டில் கொலம்பியாவில் ஏற்பட்ட மிகவும் பேரழிவுகரமான நிலநடுக்கமாகும். திங்கட்கிழமை அதிகாலை காபி பயிரிடப்படும் நாட்டின் மையப்பகுதியில் ஏற்பட்ட […]













