உலகம் செய்தி

மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ விமான நகர்வு அதிகரிப்பு

  • May 3, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்கா இராணுவ விமானங்களின் செயல்பாடு திடீரென அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க இராணுவத்தின் விமானப் போக்குவரத்தில் கணிசமான உயர்வு காணப்படுவதுடன், இதில் பெரும்பாலும் போக்குவரத்து விமானங்கள் மற்றும் வானில் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் இடம்பெற்றுள்ளன. விமானப் பயணங்களை கண்காணிக்கும் Flightradar24 செயலியின் தகவலின்படி, சனிக்கிழமையன்று ஐரோப்பா விலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படும் அமெரிக்க இராணுவ விமானங்களின் எண்ணிக்கையில் அசாதாரணமான உயர்வு பதிவாகியுள்ளது. அனுப்பப்பட்ட விமானங்களில் பெரும்பாலானவை C-17A Globemaster III ரக […]

உலகம் செய்தி

அணு ஒப்பந்தம் குறித்த அமெரிக்கா–ஈரான் பதற்றம் மீண்டும் அதிகரிப்பு

  • May 3, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான அணு ஒப்பந்த விவகாரம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. போர் நிறுத்தம் அல்லது புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டால், ஈரான் யுரேனியம் செறிவூட்டலை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் அணு ஆயுதம் பெறக்கூடாது என்று தொடர்ந்து கூறி வருவதுடன், அதனைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக, ஈரான் தங்கள் அணு திட்டம் முழுமையாக குடிமைப் பயன்பாட்டுக்காக மட்டுமே எனவும், மின்சாரம் […]

உலகம் செய்தி

பாகிஸ்தான் – குவைட் வெளியுறவு அமைச்சர்கள் பிராந்திய பதற்றம் குறித்து ஆலோசனை

  • May 2, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் மற்றும் குவைட் வெளியுறவு அமைச்சர்கள், மாறிவரும் பிராந்திய சூழ்நிலை மற்றும்  அதன் பொருளாதார தாக்கங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர். பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் டார் (Mohammad Ishaq Dar), தனது குவைட் சகாவான ஷேக் ஜர்ரா ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபா உடன் இந்த விவாதத்தை மேற்கொண்டார். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், “உம்மா” (Ummah) மற்றும் சர்வதேச  சமூகத்திற்கான நீடித்த அமைதி, பாதுகாப்பை மேம்படுத்தும் பாகிஸ்தானின் முயற்சிகளை […]

இலங்கை செய்தி

போதைப்பொருள் கடத்தல் சம்பவம் – 22 தேரர்களுக்கும் விளக்கமறியல்

  • May 2, 2026
  • 0 Comments

தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ வகை போதைப்பொருட்களை நாட்டிற்கு கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 22 தேரர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று (02.05) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து குறித்த 22 தேரர்களையும் வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த போது, 112 கிலோகிராம் போதைப்பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டனர். ‘அமிதானந்த’ எனும் தேரர் […]

உலகம் செய்தி

மாறுபட்ட கோரிக்கைகள் காரணமாக அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையில்

  • May 2, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை முன்னேற்றமின்றி தொடர்ந்து முட்டுக்கட்டையில் இருப்பதாக தோஹா (Doha) பட்டதாரி கல்வி நிறுவனத்தின் ஊடகவியல் பேராசிரியர் முகமது எல்மாஸ்ரி தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக நிலைமையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லாததால் இரு தரப்பும் இன்னும் காத்திருப்பு நிலையில் உள்ளதாக அல் ஜசீரா ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். ஈரான் 10 கோரிக்கைகள் கொண்ட பட்டியலை முன்வைத்துள்ளதாகவும், அமெரிக்கா 15 கோரிக்கைகள் கொண்ட பட்டியலை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த […]

உலகம் செய்தி

யேமன் கடற்கரையில் எண்ணெய் கப்பல் கைப்பற்றப்பட்டது – ஆயுதமேந்திய நபர்கள் தாக்குதல்

  • May 2, 2026
  • 0 Comments

யேமன் நாட்டின் ஷப்வா (Shabwa) மாகாணக் கடற்கரைக்கு அருகில், அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்கள் எம்/டி யுரேகா (MT Eureka) என்ற எண்ணெய் கப்பலைக் கைப்பற்றியுள்ளதாக யேமன் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. தாக்குதலாளர்கள் கப்பலில் ஏறி அதன் கட்டுப்பாட்டைப் பெற்ற பின்னர், அதை ஏடன் வளைகுடா  வழியாக சோமாலியா (Somalia) கடற்பகுதி நோக்கி செலுத்திச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பாக, முக்கல்லா (Mukalla) துறைமுகத்திலிருந்து சுமார் 84 கடல் மைல்கள் தென்மேற்கே, ஒரு “பச்சை நிறப் […]

உலகம் செய்தி

விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது – ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

  • May 2, 2026
  • 0 Comments

போர் பதற்றத்தைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நீக்கப்பட்டதையடுத்து, விமானப் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. செயல்பாட்டு மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளை முழுமையாக மதிப்பீடு செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தொடர்புபட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், எமிரேட்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானப் போக்குவரத்தின் மிக உயர்ந்த பாதுகாப்பு தரத்தை உறுதி செய்வதற்காக, தொடர்ச்சியான நிகழ்நேர […]

உலகம் செய்தி

மாலியில் இராணுவத் தளத் தாக்குதல் – இராணுவ வீரர்கள் மீது விசாரணை தீவிரம்

  • May 2, 2026
  • 0 Comments

மாலி (Mali) நாட்டில் கடந்த வாரம் பல இராணுவத் தளங்கள் மீது ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இராணுவ வீரர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதல்களுக்கு அல்கொய்தா (Al-Qaeda) தொடர்புடைய ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல்-முஸ்லிமின் (JNIM) அமைப்பும், பிரிவினைவாதக் குழுக்களும் பொறுப்பேற்றுள்ளன. தலைநகர் பமாகோ (Bamako) அருகிலுள்ள இராணுவ நீதிமன்ற அரசு வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கையில், பணியில் உள்ள மூன்று இராணுவ வீரர்கள், ஓய்வுபெற்ற ஒருவர் மற்றும் தாக்குதலில் கொல்லப்பட்ட […]

உலகம் செய்தி

அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு முன் ஹோர்முஸ் திறப்பு – ஈரான் புதிய முன்மொழிவு

  • May 2, 2026
  • 0 Comments

அணுசக்தி பேச்சுவார்த்தைகளை பின்னர் நடத்தி, முதலில் ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தைத் திறப்பதற்கான முன்மொழிவை ஈரான் வைத்துள்ளதாக மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். ரொய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனத்துக்கு பெயர் குறிப்பிடாமல் கருத்து தெரிவித்த அந்த அதிகாரி, அமெரிக்கா ஈரான் மீதான முற்றுகை மற்றும் தடைகளை தளர்த்த வேண்டும் என்பதும், அதே நேரத்தில் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் பின்னர் நடைபெற வேண்டும் என்பதும் இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என அவர் தெரிவித்தார். […]

இலங்கை செய்தி

இலங்கையில் பாரியளவான இணையவழி மோசடி- 37 சீனர்கள் கைது

  • May 2, 2026
  • 0 Comments

இணையதளத்தை பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படைப்பிரிவு மற்றும் தலங்கம பொலிஸாரின் ஊழல் ஒழிப்புப் பிரிவு என்பன இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலங்கம, கொஸ்வத்தை பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடொன்றைச் சோதனையிட்ட போது அங்கு 35 கணினிகள், 37 டெப் கணினிகள், 147 கையடக்கத்தொலைபேசிகள், 100 சிம் அட்டைகள் […]