உலகம் செய்தி

வியட்நாமுடன் அழமான எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாக ஜப்பான் பிரதமர் உறுதி

  • May 2, 2026
  • 0 Comments

ஜப்பானின் பிரதமர் சனே டகாயிச்சி (Sanae Takaichi), வியட்நாமுடன் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக எரிசக்தி மற்றும் முக்கிய கனிமங்கள் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. சனிக்கிழமை ஹனோய் (Hanoi) நகரில், வியட்நாம் பிரதமர் லே மின் ஹங் (Le Minh Hung) உடனை ஜப்பான் பிரதமர் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது உட்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் விண்வெளி ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கிய ஆறு […]

இந்தியா செய்தி

சிலிண்டர் விலை அதிகரிப்பு உழைக்கும் மக்களுக்கு எதிரான தாக்குதல் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

  • May 2, 2026
  • 0 Comments

வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளமை, உழைக்கும் மக்களுக்கு எதிரான தாக்குதல் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம் சுமத்தியுள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, “கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதியன்று ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து எரிபொருள் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டணியின் அடாவடி தாக்குதலால் மேற்காசிய நாடுகளில் […]

உலகம் செய்தி

லெபனானில் ஐ.நா. அமைதி காக்கும் படை பணியை நீட்டிக்க வேண்டும் – சீனா வலியுறுத்தல்

  • May 2, 2026
  • 0 Comments

லெபனானில்நீண்டகாலமாக செயற்பட்டு வரும் ஐ.நா. அமைதி காக்கும் படையின் (UNIFIL) பதவிக்காலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான சீனாவின் தூதர் ஃபூ காங் (Fu Cong) தெரிவித்துள்ளார். நியூயார்க் (New York) நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் லெபனானின் தற்போதைய நிலைமை குறித்து சீனா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், லெபனானில் முழுமையான போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படவில்லையென்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, […]

ஐரோப்பா செய்தி

அச்சுறுத்தல் நிலை உயர்வு – லண்டனில் அமெரிக்கத் தூதரகம் விடுத்த அவசர எச்சரிக்கை

  • May 2, 2026
  • 0 Comments

பிரித்தானிய அரசாங்கம் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் அளவை கடுமையான (Severe) நிலைக்கு உயர்த்தியதைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகம் (US Embassy London), பிரித்தானியாவில் வசிக்கும் அமெரிக்கக் குடிமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொது இடங்களில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறும் , பாடசாலைகள், தேவாலயங்கள், சுற்றுலா தளங்கள் மற்றும் போக்குவரத்து மையங்கள் போன்ற கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பயணிக்கும் நேரங்களையும் வழித்தடங்களை மாற்றிக் கொள்ளவும், தங்களை எளிதில் […]

உலகம் செய்தி

ஐரோப்பிய கார்கள் மீது 25% சுங்கவரி- ட்ரம்ப் அறிவிப்பு, வர்த்தக பதற்றம் அதிகரிப்பு

  • May 1, 2026
  • 0 Comments

அமெரிக்கா–ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வர்த்தக பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் டிரக்குகள் மீது சுங்க வரியை 25% ஆக உயர்த்துவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியிட்டுள்ளார். “நாங்கள் முழுமையாக ஒப்புக்கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் பின்பற்றவில்லை” என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அதற்கான குறிப்பான காரணங்களை அவர் விளக்கவில்லை. தற்போது நடைமுறையில் […]

உலகம் செய்தி

கருத்து கணிப்பைவிட மக்களின் தீர்ப்பே முக்கியம் – சுந்தர்.சி கருத்து 

  • May 1, 2026
  • 0 Comments

தேர்தல் கருத்து கணிப்பைவிட, மே 4 ஆம் திகதி வெளியாக உள்ள மக்களின் தீர்ப்பே முக்கியம் என நடிகரும் திரைப்பட இயக்குநருமான சுந்தர்.சி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி, அவரது மனைவி குஷ்பு, மகள், நடிகர் ஜெயம் ரவியின் முன்னாள் மனைவி ஆர்த்தி மற்றும் அவரது தாயார் சுஜாதா ஆகியோர் இன்று பழநிக்கு சென்றனர். பழநி மலை அடிவாரத்தில் இருந்து மின் இழுவை ரயில் […]

உலகம் செய்தி

அமெரிக்கா அச்சுறுத்தலை கைவிட்டால் மாத்திரமே பேச்சு வார்த்தை சாத்தியம் – ஈரான் திட்டவட்டம்

  • May 1, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் ராஜதந்திர பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக உள்ளதென வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். வொஷிங்டன் தனது “அச்சுறுத்தும் சொல்லாடல்கள்” மற்றும் “விரிவாக்க அணுகுமுறையை” கைவிட்டால், இருதரப்பு உரையாடலுக்கு வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார். பல பிராந்திய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களின் போது இந்த கருத்தை அராக்சி வெளியிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா தனது அணுகுமுறையை மாற்றினால், ராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைக்கு ஈரான் திறந்த மனதுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், […]

உலகம் செய்தி

திரைசேறி சர்ச்சை – நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளர் தற்கொலை செய்தமை உறுதியானது

  • May 1, 2026
  • 0 Comments

மர்மமான முறையில் உயிரிழந்த நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம், தற்கொலை என மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட நால்வர் கொண்ட சட்ட மருத்துவக் குழு உறுதி செய்துள்ளது. நிதியமைச்சுக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடியாகக் கைமாற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த, திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷ, நேற்று (30) தனது வீட்டுத் தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். அவரது கை மற்றும் காலில் மூன்று வெட்டுக் […]

உலகம் செய்தி

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் “இயற்கை உரிமை” – துணை நாடாளுமன்ற சபாநாயகர் கருத்து

  • May 1, 2026
  • 0 Comments

ஈரானின் ஹோர்முஸ் நீரிணை குறித்த புதிய கருத்துகள் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன. ஈரானிய துணை நாடாளுமன்ற சபாநாயகர் அலி நிக்ஸாத், ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்த ஈரானுக்கு இயற்கை உரிமை இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நீர்வழிப்பாதை அதன் முந்தைய நிலைக்கு மீண்டும் செல்லாது என்றும் அவர் கூறியுள்ளார். “ஹோர்முஸ் நீரிணை ஒரு சர்வதேச நீர்வழிப்பாதை அல்ல; அது ஈரானின் இயற்கை உரிமை” என்று ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய கருத்தில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த […]

இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

  • May 1, 2026
  • 0 Comments

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) இரண்டு பிரதான பேரணிகளை நடத்தியுள்ளது. வடக்கு மாகாண பேரணி முல்லைத்தீவு, மாங்குளத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாகாண பேரணி, பட்டிப்பளையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது உரையாற்றிய இராசமாணிக்கம் சாணக்கியன் , புதிய அரசியலமைப்பு கட்டமைப்பின் ஊடாக நிலையான அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் […]