மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், இது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்க, மத்திய அரசு தரப்பில் சனிக்கிழமை வரை கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. இந்தியா செய்தி

இந்திய கல்வி அமைச்சர் ராஜினாமா? நாளைவரை அவகாசம்

  • July 24, 2026
  • 0 Comments

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், இது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்க, மத்திய அரசு தரப்பில் சனிக்கிழமை வரை கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை சார்ந்த பிரச்சனைகள் காரணமாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இளைஞர்களும் […]

இந்தியா செய்தி

மத்திய அமைச்சர் பதவி விலகும்வரை பேச்சு கிடையாது: ராகுல் காந்தி திட்டவட்டம்

  • July 24, 2026
  • 0 Comments

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி நீக்கம் செய்யப்படும் வரை, நாடாளுமன்றப் பேச்சுவார்த்தையிலோ அல்லது விவாதத்திலோ எதிர்க்கட்சிகள் பங்கேற்காது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்திருந்தார். எனது பெயரைக் குறிப்பிட்டு அவர் அழைத்ததால் நான் பதிலளிக்க முயன்றபோது எனது மைக் அணைக்கப்பட்டது; பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. […]

ஹராரேவில் நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் T20 போட்டியில், இந்திய அணியின் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் சர்வதேச T20 அரைசதத்தைப் பதிவு செய்து, அணியின் 7 விக்கெட் வித்தியாசத்திலான வெற்றிக்கு வித்திட்டார். செய்தி விளையாட்டு

சூர்யவன்ஷி அதிரடி: இந்திய அணி வெற்றி

  • July 24, 2026
  • 0 Comments

ஹராரேவில் நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் T20 போட்டியில், இந்திய அணியின் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் சர்வதேச T20 அரைசதத்தைப் பதிவு செய்து, அணியின் 7 விக்கெட் வித்தியாசத்திலான வெற்றிக்கு வித்திட்டார். வியாழக்கிழமை நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் ஆல்ரவுண்டர் வெஸ்லி மாதவெரே அதிகபட்சமாக 39 […]

Fisheries Minister Chandrasekaran Media அரசியல் இலங்கை செய்தி

யாழ்.நூலகத்தை எரிந்த பாவிகள்: அமைச்சர் சந்திரசேகரன் கடும் விசனம்

  • July 24, 2026
  • 0 Comments

“1983 கறுப்பு ஜூலை கலவரத்தில் மலையக மக்களையும் ஐக்கிய தேசியக் கட்சியினரே நாசமாக்கினார்கள். தமிழர்களின் இதயமாகக் கருதப்படும் யாழ். பொது நூலகத்தைத் தீக்கிரையாக்கிய பாவிகளே, தற்போது மக்கள் நலன் பற்றிப் பேசுகின்றனர்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அங்கு மேலும் உரையாற்றுகையில்: […]

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஹவாட் கிலாத் (Havat Gilad) குடியிருப்புப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பிறகு, தாக்குதலுக்குக் காரணமான கிராமத்தின் மீது ராணுவம் "இரும்புக்கரம்" கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) கோரிக்கை விடுத்துள்ளார். உலகம் செய்தி

பாலஸ்தீனிய கிராமங்கள் மீது “இரும்புக்கரம்” கொண்டு தாக்க அமைச்சர் உத்தரவு

  • July 24, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஹவாட் கிலாத் (Havat Gilad) குடியிருப்புப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பிறகு, தாக்குதலுக்குக் காரணமான கிராமத்தின் மீது ராணுவம் “இரும்புக்கரம்” கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஸ்மோட்ரிச், “கிலாத் பண்ணை அருகே . தாக்குதலில் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்; காயமடைந்தவர்கள் […]

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு சரிந்ததன் விளைவாக, 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதலுக்காக, கூடுதலாக 48 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக, பொது நிதிக் குழுவின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

இலங்கை ரூபா மதிப்பு வீழ்ச்சியால் 48 பில்லியன் ரூபா கூடுதல் செலவு

  • July 24, 2026
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு சரிந்ததன் விளைவாக, 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதலுக்காக, கூடுதலாக 48 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக, பொது நிதிக் குழுவின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் முன்னிலையாகிய, இலங்கை​​ரூபாயின் மதிப்பு சரிந்ததன் காரணமாக கடந்த ஆண்டு வெளிநாட்டுக் கடன் சேவைக்காகச் செலவிடப்பட்ட கூடுதல் தொகை குறித்து பொது நிதிக் குழுவின் (COPF) தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார். இதற்குப் […]

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோவுடன் பேச்சு நடத்தியுள்ளார். இலங்கை செய்தி

அமெரிக்க ராஜாங்க செயலருடன் விஜித ஹேரத் பேச்சு

  • July 24, 2026
  • 0 Comments

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோவுடன் பேச்சு நடத்தியுள்ளார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற, 33வது ஆசியான் பிராந்திய மாநாட்டின் ஒரு பக்க நிகழ்வாக, நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்தப் பயணத்தின் போது அவர், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் […]

ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வருடாந்த வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) வருகை Kyrgyzstan தந்துள்ளார். உலகம் செய்தி

ஷாங்ஹாய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பு

  • July 24, 2026
  • 0 Comments

ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வருடாந்த வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) வருகை Kyrgyzstan தந்துள்ளார். இந்த ஆண்டிற்கான கூட்டத்தை நடத்தும் கிர்கிஸ்தான் Kyrgyzstan நாட்டின் வெளிவிவகார அமைச்சர், வெள்ளிக்கிழமை வருகை தந்த அராக்சியை நேரில் வரவேற்றார். சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், ஈரான் மற்றும் ஐந்து உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இந்த வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியிலிருந்து புகைப்படம் ஒன்றை ஈரானிய வெளியுறவு அமைச்சர் […]

பதவியிழந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நெருங்கிய ஆதரவாளரான பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன், தமது பதவி காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்யவுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை 'ராய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பங்களாதேஷ் ஜனாதிபதி ராஜினாமா

  • July 24, 2026
  • 0 Comments

பதவியிழந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நெருங்கிய ஆதரவாளரான பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன், தமது பதவி காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்யவுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். நீதிமன்றத் தண்டனையைத் தொடர்ந்து, நாடு கடத்தப்பட்ட நிலையிலிருந்து சரணடைவதற்காகத் தான் தாயகம் திரும்புவதாக ஹசீனா அறிவித்த சில நாட்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டின் தலைவராகவும், முப்படைத் தலைமைத் தளபதியாகவும் இருக்கும் ஹாபுதீனின் இந்த ராஜினாமா, ஷேக் ஹசீனா […]

"சிறைச்சாலை அதிகாரிகளையே பாதுகாக்க முடியாத இந்த அரசாங்கத்தால் தேசிய பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்? நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் என்பது எங்களுக்குத் தெரியும். இலங்கை செய்தி

தேசிய பாதுகாப்பு குறித்து எதிரணி கரிசனை

  • July 24, 2026
  • 0 Comments

“சிறைச்சாலை அதிகாரிகளையே பாதுகாக்க முடியாத இந்த அரசாங்கத்தால் தேசிய பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்? நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் என்பது எங்களுக்குத் தெரியும். எனினும், உண்மை நிலவரங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் ஒரு வாய்ப்பாகவே அதனைப் பயன்படுத்துவோம்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுக் கூட்டம், கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நீடித்த […]