உலகம் செய்தி

ஈரான்மீதான தாக்குதலை நியாயப்படுத்தும் இஸ்ரேல்!

  • June 8, 2026
  • 0 Comments

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களை அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதவர் Yechiel Leiter நியாயப்படுத்தியுள்ளார். இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை மட்டுமே குறிவைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிராந்தியத்தில் ஈரானின் தலையீட்டை அண்டை நாடுகள் எதிர்ப்பதாகக் குறிப்பிடும் அவர், ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்துள்ளார். இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை “சுயமரியாதை உள்ள எந்தவொரு நாடும்” பொறுத்துக் கொள்ளாது […]

உலகம் செய்தி

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மூவர் பலி!

  • June 8, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸ் கடற்கரைப் பகுதியில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மூவர் பலியாகியுள்ளனர். மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர் என்பது தற்போதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறிய அளவிலான சுனாமி அலைகள் உருவாகியுள்ளன, மேலும் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனத்தின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 7:37 மணிக்கு மிண்டனாவோ தீவில் உள்ள கடலோர நகரமான ஜெனரல் சாண்டோஸிற்கு தென்மேற்கே சுமார் 13 […]

உலகம் செய்தி

ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல்: மீண்டும் போர் பதற்றம்!

  • June 8, 2026
  • 0 Comments

ஈரானின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் அமைந்துள்ள இராணுவ இலக்குகளின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானில் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் அல்லது இலக்குகளின் துல்லியமான இடங்கள் குறித்த மேலதிகத் தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்த மோதலைத் தொடர்ந்து, தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையம் தனது அனைத்து விமானச் சேவைகளையும் காலவரையறையின்றி நிறுத்தி வைத்துள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வான்வழித் தாக்குதல் முக்கியமான […]

இலங்கை செய்தி

கணவருக்காக களமிறங்கிய சுரேஷ் சலேவின் மனைவி!

  • June 8, 2026
  • 0 Comments

“எனது கணவர் அப்பாவி, இந்நாட்டுக்காக 38 வருடங்கள் சேவையாற்றியவர். எனவே, அவருக்காக நாட்டு மக்கள் குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்று அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் மனைவியான மனோரி சலே தெரிவித்தார். சிறைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனது கணவரை நேற்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ சுரேஷ் சலே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை […]

இலங்கை செய்தி

பாதுகாப்பு தீவிரம்: விசேட அதிரடிப்படை களமிறக்கம்!

  • June 8, 2026
  • 0 Comments

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளிலேயே இவ்வாறு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிஐடியினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார். இந்நிலையில் அவர் நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

புங்குடுதீவு கடலில் காணாமல்போன 3 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்பு!

  • June 8, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்பகுதியிலிருந்து கடற்றொழிலுக்காகச் சென்ற நிலையில் காணாமல்போயிருந்த மூன்று மீனவர்களும் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த இந்த மூன்று மீனவர்களும் கடந்த வெள்ளிக்கிழமை கடற்றொழிலுக்குச் சென்றிருந்த நிலையில், கரை திரும்பாமல் காணாமல்போயிருந்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்களைத் தேடும் பணிகள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை முதல் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. கடற்றொழில் அமைச்சரின் நேரடிப் பணிப்புரைக்கு அமைவாக, கடற்படையினர் தமது படகுகள் மூலம் நயினாதீவு மற்றும் அதனை அண்டிய ஆழ்கடல் […]

ஐரோப்பா செய்தி

1 மில்லியன் பவுண்ட் லாட்டரி வென்ற குடும்பத் தலைவர் விபத்தில் பலி!

  • June 7, 2026
  • 0 Comments

பிரிட்டனின் Essex மாகாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த, மில்லியன் பவுண்டுகள் லாட்டரி வென்ற அதிர்ஷ்டசாலி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது Hit and Run (மோதிவிட்டு வாகனத்தை நிறுத்தாமல் தப்பி ஓடுதல்) விபத்தாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கடந்த மே 21ஆம் திகதி காலை 6:30 மணியளவில், Tiptree பகுதியில் மிதிவண்டியில் (Bicycle) சென்று கொண்டிருந்த நபர் மீது கறுப்பு நிற Ford Ka ரக கார் மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 30 வயது […]

உலகம் செய்தி

சொந்த கட்சிக்குள்ளேயே ட்ரம்புக்கு வலுக்கிறது எதிர்ப்பு!

  • June 7, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக அவரது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு அலைகள் தீவிரமடைந்து வருகின்றன. இதுவரை டிரம்பை எதிர்க்கத் தயங்கி வந்த குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது ட்ரம்பின் முடிவுகளுக்கு எதிராகத் துணிச்சலாகப் போர்க்கொடி தூக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரு அவைகளையும் சேர்ந்த குடியரசுக் கட்சியினரின் பல்வேறு குழுக்கள் ஒன்றிணைந்து டிரம்பின் அதிரடி முடிவுகளுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளன. மேலும், உக்ரைனுக்கு […]

செய்தி விளையாட்டு

பாலஸ்தீன வீரர்களின் மரணத்திற்கு விளையாட்டு சீருடைகளை வைத்து அஞ்சலி!

  • June 7, 2026
  • 0 Comments

இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்த பாலஸ்தீன கால்பந்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கால்பந்து மைதானத்திற்கு வெளியே நடைபெற்றது. Red Card Glasgow என்ற அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்வில், உயிரிழந்த வீரர்களை நினைவுகூரும் வகையில் பூங்கொத்துகள் மற்றும் விளையாட்டு சீருடைகள் அங்கு வைக்கப்பட்டன. ஹாம்டன் பார்க் மைதானத்தில் ஸ்காட்லாந்து மற்றும் இஸ்ரேல் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்ற அதே நேரத்தில் இந்த அமைதிப் போராட்டம் அரங்கேறியது. இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளால் […]

இந்தியா செய்தி

சொத்துக்காக நேர்ந்த கொடூரம்: ஆஸ்திரேலிய கணித ஆசிரியர் இந்தியாவில் படுகொலை

  • June 7, 2026
  • 0 Comments

இந்தியாவில் கடந்த மாதம் மாயமான ஆஸ்திரேலியா, மெல்பேர்ன் நகர கணித ஆசிரியர் சுனில் சர்மா, அவரது சகோதரராலேயே படுகொலை செய்யப்பட்டு, கால்வாய் ஒன்றில் உடல் வீசப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 66 வயதான சுனில் சர்மா, தனது பணி ஓய்வுக் காலத்தைத் திட்டமிட்டு வந்த நிலையில், வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகருக்குச் சென்றிருந்தார். அங்கு தனக்குச் சொந்தமான முதலீட்டு நோக்கம் கொண்ட சொத்து ஒன்றை விற்பனை செய்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோதே, கடந்த […]