உலகம் செய்தி

தாக்குதலை உடன் நிறுத்தவும்! இஸ்ரேல், ஈரானுக்கு ட்ரம்ப் உத்தரவு!

  • June 8, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் தனது பதிலடித் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பே, அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அமைதி காக்குமாறு ட்ரம்ப் வலியுறுத்தினார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இந்த அறிவுறுத்தலை பின்பற்றாது ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருந்தது. இந்நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறானதொரு வலியுறுத்தலை விடுத்துள்ளார்.    

உலகம் செய்தி

ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்புமீது ஈரான் கடும் அதிருப்தி!

  • June 8, 2026
  • 0 Comments

ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான IAEA-வின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Esmaeil Baghaei , கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் மீது முன்வைக்கப்படும் எந்தவொரு கண்டனத் தீர்மானத்திற்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடும், ஐக்கிய நாடுகள் சபையின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையும் பிராந்தியத்தின் அமைதிப் பேச்சுவார்த்தைகளை சீர்குலைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அணுசக்தி நிலையங்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பான […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு NPP அரசுக்கு வலுக்கிறது அழுத்தம்!

  • June 8, 2026
  • 0 Comments

“வடக்கு, கிழக்குக்கு மட்டும் அல்ல முழு நாட்டுக்கும் மாகாணசபை முறைமை அவசியம். எனவே, மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் விரைவில் நடத்த வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்பது தேசிய மக்கள் சக்தி வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேர்தலை […]

செய்தி விளையாட்டு

விசா சர்ச்சைக்கு மத்தியில் மெக்சிக்கோவில் களமிறங்கியது ஈரான் அணி!

  • June 8, 2026
  • 0 Comments

ஈரானின் உலகக் கோப்பை கால்பந்து அணி மெக்சிகோவில் உள்ள டிஹுவானா (Tijuana) நகரில் தரையிறங்கியுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக துருக்கியில் பயிற்சி பெற்று வந்த ஈரானிய அணி, அங்கிருந்தே நேற்று மெக்சிக்கோ வந்துள்ளது. தங்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய விசா கிடைக்குமா என்பதில் நிலவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக, ஈரானிய கால்பந்து சம்மேளனம் , பேச்சுவார்த்தை நடத்தி, தங்களின் முதன்மைப் பயிற்சி முகாமை அரிசோனாவில் இருந்து மெக்சிகோவிற்கு மாற்றியது. ஈரான் அணி விளையாடவிருக்கும் முதல் போட்டிக்கு வெறும் 10 […]

உலகம் கல்வி

போர் நிறுத்த ஒப்பந்தமீறலுக்கு அமெரிக்காவே பொறுப்பு: ஈரான் சீற்றம்!

  • June 8, 2026
  • 0 Comments

போர்நிறுத்த ஒப்பந்த மீறல்களுக்கு அமெரிக்காவே முழுப் பொறுப்பு என்று ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Esmaeil Baghaei குற்றம் சாட்டியுள்ளார். பிராந்தியத்தில் இஸ்ரேல் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அமெரிக்கக் கொள்கைகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. வாஷிங்டனின் நேரடி ஆதரவு இன்றி இஸ்ரேலால் இத்தகைய அத்துமீறல்களைச் செய்ய இயலாது எனவும் Esmaeil Baghaei சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவின் தலையீடே முதன்மைக் காரணம் என ஈரான் கருதுகின்றது.

உலகம் செய்தி

போர் பதற்றம்: எகிறியது எண்ணெய் விலை: சரிந்தது பங்கு சந்தை!

  • June 8, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கிடையில் மீண்டும் போர் வெடித்துள்ளதால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் திடீர் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய பிரெண்ட் கச்சா எண்ணெய் மற்றும் US-traded crude எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் 4 சதவீதத்திற்கும் மேலாக கணிசமாக உயர்ந்துள்ளன. அதேவேளை, போர் தீவிரமடையக்கூடும் என்ற அச்சத்தால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ள நிலையில், ஆசியப் பங்குச் சந்தைகள் திங்களன்று கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தன. குறிப்பாக, தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டது. சர்வதேச சந்தை வல்லுநர்கள் இந்த ராணுவ […]

இலங்கை செய்தி

சுரேஷ் சலேவுக்காக கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்!

  • June 8, 2026
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தி கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று (09) சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பமானது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்ட அரசியல் வாதிகளும், தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகளும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். சுரேஷ் சாலே நாட்டுக்காக சேவையாற்றியவர், புலி டயஸ்போராக்களின் தேவைக்காக அவர் பழிவாங்கப்படுகின்றார் […]

உலகம் செய்தி

போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: தோல்வியை நோக்கி அமைதி முயற்சி!

  • June 8, 2026
  • 0 Comments

இஸ்ரேல், ஈரானுக்கிடையில் மீண்டும் ஏற்பட்டுள்ள தீவிரமான போர் பதற்றமானது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தைமீறி இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதால், அமைதி முயற்சி தோல்வியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புமீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே இஸ்ரேலை ஈரான் இலக்கு வைத்துள்ளது எனக் கூறப்படுகின்றது. இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் ஈரான்மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி செய்தபோதிலும், […]

அரசியல் இலங்கை செய்தி

” புலிகள் குறித்து துல்லியமான உளவு தகவல் வழங்கியவரே சுரேஷ் சலே” – கூட்டு எதிரணி புகழாரம்!

  • June 8, 2026
  • 0 Comments

“புலிகள் அமைப்பினர் குறித்து துல்லியமான உளவுத் தகவல்களை வழங்கிய அதிகாரியே சுரேஷ் சலே. எனவே, அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இந்நாட்டின் தேசப்பற்றாளர்கள் வீதிக்கு இறங்குவார்கள். ” – இவ்வாறு கூட்டு எதிரணி உறுப்பினரும், கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளருமான் சுகீஸ்வர பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ சுரேஷ் சலேவுக்கு சுகாதார உணவு வழங்கப்படவில்லை. சோறும், ஒரு கறியுமே வழங்கப்படுகின்றது. மலசலக்கூடம் செல்லமுடியவில்லை. எவரேனும் அவரை சந்திக்க […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சூனியக்காரியாக மாறிய ஆஸ்திரேலிய அரசியல் பிரபலம்: வலுக்கிறது எதிர்ப்பு!

  • June 8, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா விக்டோரியா மாநில பிரீமியர் Jacinta Allan னை இழிவுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு நடமாடும் விளம்பரப் பலகையை ஆஸ்திரேலியாவின் மூத்த அரசியல் தலைவர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர். இந்த விளம்பரங்களில் முதல்வரை மந்திரவாதி போல் சித்தரிக்கும் செயற்கை நுண்ணறிவுப் படங்கள் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் முன்னாள் பிரதமர் ஜூலியா கில்லார்ட் ஆகியோர் இந்தச் செயலை பாலினப் பாகுபாடு கொண்டதாகவும் பொது வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் கருதுகின்றனர். அரசியல் தலைவர்களுக்கு […]