பாரிஸில் போதைப் பொருள் தேடிய பொலிஸாருக்கு கிடைத்த ஓவியம்
பாரிஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் பொலிஸார் நடத்திய சோதனையில் பாப்லோ பிக்காசோவின் ஓவியம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
“போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த ஓவியம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பாரிஸின் கிழக்கே உள்ள சாம்பிக்னி-சுர்-மார்ன் (hampigny-sur-Marne) என்ற நகரத்தில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் நால்வர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிக்காசோவின் ஓவியம், கஞ்சா பிசின், ஆடம்பர ஆடைகள் மற்றும் பல ஆயிரம் யூரோ மதிப்பிலான ரொக்கப் பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அவர்களிடம் தற்போது விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




