பாலஸ்தீன வீரர்களின் மரணத்திற்கு விளையாட்டு சீருடைகளை வைத்து அஞ்சலி!
இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்த பாலஸ்தீன கால்பந்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கால்பந்து மைதானத்திற்கு வெளியே நடைபெற்றது.
Red Card Glasgow என்ற அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்வில், உயிரிழந்த வீரர்களை நினைவுகூரும் வகையில் பூங்கொத்துகள் மற்றும் விளையாட்டு சீருடைகள் அங்கு வைக்கப்பட்டன.
ஹாம்டன் பார்க் மைதானத்தில் ஸ்காட்லாந்து மற்றும் இஸ்ரேல் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்ற அதே நேரத்தில் இந்த அமைதிப் போராட்டம் அரங்கேறியது.
இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளால் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டதை உலகிற்கு எடுத்துரைப்பதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாக இருந்தது.
திரளான மக்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.
இவ்வாறு விளையாட்டுத் துறையில் ஏற்பட்டுள்ள மனித உயிரிழப்புகளுக்கு ஸ்காட்லாந்து ஆர்வலர்கள் தங்களது கண்டனத்தையும் இரங்கலையும் பதிவு செய்துள்ளனர்.
Thank you to those who attended our vigil for the murdered Palestinian footballers.
While @scottishfa stay silent on another fixture against israel's women's team, Palestinians continue to have their lives destroyed by israel. pic.twitter.com/lIJk9s6cjO
— Show Israeli Genocide the Red Card (@RedCardGlasgow) June 6, 2026





