பாதுகாப்பு தீவிரம்: விசேட அதிரடிப்படை களமிறக்கம்!
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளிலேயே இவ்வாறு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிஐடியினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





