இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் (Harry Kane) அல்லது பிற வீரர்கள் ஆபத்தான பகுதிக்குள் நுழையும் போதெல்லாம், கானா வீரர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டு தடுத்தனர். செய்தி விளையாட்டு

கானாவின் இரும்புக்கோட்டை தடுப்பாட்டம் – இங்கிலாந்துக்கு ஏமாற்றம்

  • June 24, 2026
  • 0 Comments

உலகக் கோப்பையின் Group L பிரிவின் இரண்டாவது லீக் போட்டியில், இங்கிலாந்து அணி கானாவின் பலத்த தடுப்பாட்டத்தை உடைக்க முடியாமல் திணறியது. இதனால் நேற்று நடைபெற்ற இப்போட்டி 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த முடிவு இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ள போதிலும், தங்களது முதல் போட்டியில் குரோஷியாவை 4-2 என வீழ்த்தியிருந்த இங்கிலாந்து அணிக்கு இது பெரும் ஏமாற்றமாகவே அமைந்தது. தங்களது முதல் போட்டியில் பனாமாவுக்கு எதிராகக் கடைசி நிமிடத்தில் […]

விமானத்தின் இறக்கை வழியாகச் செல்லும் மற்றும் பறக்கும் போது காற்றின் அழுத்த பாரத்தைத் தாங்கும் முக்கியக் கட்டமைப்புப் பகுதியிலேயே இந்த விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இறக்கைகளில் விரிசல்: மீண்டும் சர்ச்சையில் ஏர்பஸ் A380

  • June 24, 2026
  • 0 Comments

எமிரேட்ஸ் (Emirates) மற்றும் குவாண்டாஸ் (Qantas) ஆகிய விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் ஏர்பஸ் A380 ரக விமானங்களின் இறக்கைப்பகுதியில் உள்ள முக்கிய பாகத்தில் விரிசல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் 16 விமானங்களை சோதனைக்கு உட்படுத்த உள்ளதாகவும், அதில் 5 விமானங்களை உடனடியாகச் சோதிக்கப்படவுள்ளன எனவும் ஏர்பஸ் Airbus நிறுவனம் தெரிவித்துள்ளது. வழக்கமான பராமரிப்புப் பணிகளின் போது இந்த விரிசல்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட விமானங்களின் இறக்கை-விட்டக் கட்டமைப்பை (Wing-spar structure) உடனடியாகப் பரிசோதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய விமானப் போக்குவரத்து […]

Portugal's Cristiano Ronaldo celebrated in his signature style after scoring against Uzbekistan செய்தி விளையாட்டு

6 உலகக் கோப்பைத் தொடர்களிலும் கோல் அடித்து ரொனால்டோ வரலாற்று சாதனை

  • June 24, 2026
  • 0 Comments

உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்களை அடித்து, உலகக்கிண்ண தொடரில் கோல் வேட்டையை ஆரம்பித்துள்ளார் ரொனால்டோ. ரொனால்டோவின் ஆட்டம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், கோல் அடிப்பதில் தனக்கிருக்கும் அபார திறமை இன்னும் குறைந்துவிடவில்லை என்பதை இதன்மூலம் ரசிகர்களுக்கு நினைவூட்டியுள்ளார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகல் அணி 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதில் முதல் பாதியில் ரொனால்டோ இரண்டு கோல்களை அடித்தார். இது அவருக்கும், அவரது அணிக்கும் பெரும் நிம்மதியை […]

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட தடயவியல் அகழ்வாய்வுப் பணிகளின் 31ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று இடம்பெற்றன. இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணி இடைநிறுத்தம்

  • June 24, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றுச் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது 19 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினத்தில் புதிய எலும்புக்கூடுகள் எதுவும் அடையாளம் காணப்படாத போதிலும், ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருந்த எலும்புக்கூடுகளே இவ்வாறு முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 32ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று யாழ். நீதிவானின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டன. நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்ட 19 மனித எலும்புக்கூடுகளில், மூன்று சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் […]

இஸ்லாமாபாத் நகரில் தரையிறங்கிய ஈரான் ஜனாதிபதியை , பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி, பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் பல அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்றனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பாகிஸ்தானில் களமிறங்கினார் ஈரான் ஜனாதிபதி

  • June 23, 2026
  • 0 Comments

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையில் கடந்த பெப்ரவரி மாதம் ஏற்பட்ட போருக்கு பின்னர், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இன்று (24) பாகிஸ்தான் சென்றுள்ளார். இஸ்லாமாபாத் நகரில் தரையிறங்கிய ஈரான் ஜனாதிபதியை , பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி, பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் பல அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்றனர். ஈரான் ஜனாதிபதியுடன்அந்நாட்டு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவொன்றும் இப்பயணத்தில் […]

சுமார் 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடைய இந்த விரிவான தொடர்பாடல் அமைப்பு, இலங்கை கடற்படையின் கடலோரக் கண்காணிப்புக் கப்பல்களில் (OPVs) நிறுவப்படவுள்ளது. இலங்கை செய்தி

இலங்கை கடற்படைக்கு செயற்கைகோள் தொடர்பாடல் அமைப்பு கையளிப்பு

  • June 23, 2026
  • 0 Comments

இலங்கை கடற்படையின் கடல்சார் இணைப்பு மற்றும் செயற்பாட்டு திறன்களை மேம்படுத்தும் வகையில், அமெரிக்கா மேம்பட்ட Fleet Broadband செயற்கைக்கோள் தொடர்பாடல் அமைப்பை இலங்கை கடற்படைக்கு (SLN) கையளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு ஜூன் 22 கொழும்புத் துறைமுகத்தில் SLNS கஜபாஹு கப்பலில் நடைபெற்ற விசேட வரவேற்பு நிகழ்வின் போது வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் துறை உதவி செயலாளர் […]

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் அரசியல் இலங்கை செய்தி

‘இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறைவடைந்துள்ளது’

  • June 23, 2026
  • 0 Comments

“பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. நாம் கடற்றொழிலாளர்களைக் கைவிடமாட்டோம்” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு: “கரைவலை மீன்பிடி என்பது ஒரு பாரம்பரிய முறைமையாகும். அந்த முறைமை இலங்கையில் தடை செய்யப்படவில்லை; அது தொடர்ந்து முன்னெடுக்கப்படும். எனினும், உழவு […]

வெஸ்ட் லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை நிறுவனத்துக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தும் நிகழ்வின்போது இலங்கை கல்வி செய்தி

இலங்கையில் கால்பதித்தது ‘வெஸ்ட் லண்டன் பல்கலைக்கழகம்’

  • June 23, 2026
  • 0 Comments

இலங்கையின் உயர்கல்வித் துறையில் ஒரு மைல்கல்லாக, வெஸ்ட் லண்டன் பல்கலைக்கழகம் (University of West London – UWL) தனது கிளை வளாகத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இலங்கையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வியை வழங்கும் முன்னோடி நிறுவனமான ANC வளாகத்துடன் இணைந்து செயல்படும் இந்த நிறுவனம், மாணவர்கள் தங்கள் தாய்நாட்டிலேயே இருந்தபடி பிரித்தானிய கல்வித் தரத்திலான பட்டப்படிப்புகளைப் பெற வழிவகுக்கிறது. பாடத்திட்டங்கள், மதிப்பீடுகள் மற்றும் தரக் கட்டுப்பாடு ஆகிய அனைத்தும் வெஸ்ட் லண்டன் பல்கலைக்கழகத்தின் தரநிலைகளுக்கு ஏற்ப […]

யாழ்ப்பாணத்தில் அர்ச்சுனாவின் உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அரசியல் இலங்கை செய்தி

நாடாளுமன்றத்திற்கு வந்த ‘செருப்பு மாலை’

  • June 23, 2026
  • 0 Comments

“மக்கள் வாழ்ந்தால் போதும்; அவர்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் எனில் நான் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பேன். இதுதான் எனது அரசியல்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (23) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அத்துடன், யாழ்ப்பாணத்தில் தனது உருவப்படத்திற்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலும் அர்ச்சுனா எம்.பி. சபையில் கருத்து வெளியிட்டார். இது குறித்து அவர் மேலும் பேசுகையில்: “அண்மையில் எனது உருவப்படத்திற்குச் செருப்பு மாலை ஒன்று […]

ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) ஐரோப்பா செய்தி

நம்பகத்தன்மையை இழந்துவிட்டது ஐரோப்பா: ஈரான் விசனம்

  • June 23, 2026
  • 0 Comments

ஈரான்மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் என்பன நடத்திய தாக்குதலின்போது போது ஐரோப்பிய நாடுகள் கடைபிடித்த அணுகுமுறையை ஈரான் கடுமையாக விமரிசித்துள்ளது. மேற்படி போரின்போது ஐரோப்பிய சக்திகள் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) குறிப்பிட்டுள்ளார். இத்தகைய தவறான கொள்கைகளால் உலக அரங்கில் ஐரோப்பாவின் நம்பகத்தன்மை மற்றும் அந்தஸ்து கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ” எதிராகத் திணிக்கப்பட்ட இரண்டு போர்களின் போதும், ஐரோப்பிய நாடுகள் முற்றிலும் பொருத்தமற்ற […]