யாழ்.பல்கலையில் கறுப்புக் கொடி: மாணவர்கள் விசாரணைக்கு அழைப்பு!
இலங்கையின் சுதந்திர தினத்தன்று, யாழ். பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை இறக்கி, கறுப்புக் கொடி ஏற்றிய சம்பவம் தொடர்பில் மாணவர் தலைவர்கள் உள்ளிட்ட மூவரை விசாரணைக்கு சமூகமளிக்குமாறு யாழ். மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் நேரடி ஆலோசனையின் கீழ் இந்த விசாரணை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. யாழ். மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரியினால் யாழ். பல்கலைக்கழகப் பதிவாளருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் பின்வரும் மூன்று மாணவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. […]













