அமெரிக்க ராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோ Marco Rubio மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஆகியோருக்கிடையிலான சந்திப்பின்போது எடுக்கப்பட்ட படம். உலகம் செய்தி

அமீரகத்தின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா துணை நிற்கும்: Marco Rubio உறுதி

  • June 24, 2026
  • 0 Comments

அமெரிக்க ராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோ Marco Rubio , ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை Sheikh Mohamed bin Zayed Al Nahyan நேரில் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில், ஹார்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வது மற்றும் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவது போன்ற முக்கிய விவகாரங்கள் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டன. ஈரானின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக அமீரகம் காட்டிய […]

RE-VIVE (துடிப்பான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சாத்தியமான பொருளாதாரங்கள் மூலம் பிராந்திய அதிகாரமளித்தல்) திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் உள்ள அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

கிழக்கு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து உலக வங்கி பிரதிநிதிகள் ஆராய்வு

  • June 24, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும், உலக வங்கியின் தொழில்நுட்ப மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைக் குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் அலுவலகத்தில் இன்று (24)நடைபெற்றது. இதன்போது RE-VIVE (துடிப்பான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சாத்தியமான பொருளாதாரங்கள் மூலம் பிராந்திய அதிகாரமளித்தல்) திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் உள்ள அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக கொட்பே வளைகுடா மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி திட்டம், பாசிக்குடா சுற்றுலா அபிவிருத்தி திட்டம் மற்றும் அருகம்பே சுற்றுலா […]

புதையல் தோண்டும் ஸ்கேன் இயந்திரத்துடன் வேனில் பயணித்த எட்டு சந்தேக நபர்களை திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். ai image இலங்கை செய்தி

புதையல் தோண்டும் ஸ்கேன் இயந்திரத்துடன் 8 பேர் கைது

  • June 24, 2026
  • 0 Comments

புதையல் தோண்டும் ஸ்கேன் இயந்திரத்துடன் வேனில் பயணித்த எட்டு சந்தேக நபர்களை திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் பயணித்த வேனில் புதையல் கண்டறியும் ஸ்கேன் இயந்திரம் மற்றும் பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கைத்துறை முகத்துவாரம் (லங்காப்பட்டுண) சந்தியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக […]

எரிவாயு கசிவால் எரியத் தொடங்கிய தீ, எதிர்பாராதவிதமாகத் தொழிற்சாலை வளாகத்தில் தங்கியிருந்த இராணுவத்தினரின் தங்குமிட பகுதிக்கும் மிக வேகமாகப் பரவியுள்ளது. இலங்கை செய்தி

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் தீ விபத்து

  • June 24, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் இன்று (24) மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சொத்துக்களுக்குப் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும் புகை மண்டலமாக மாறியுள்ளது. நீண்டகாலமாகச் செயலற்றுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் உள்ள பழைய இரும்புகளை அகற்றும் பணி, தற்சமயம் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப்பணிகள் இன்று மாலையும் வழமை போல் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம், இரும்புகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட சிலிண்டரின் எரிவாயுவில் ஏற்பட்ட […]

Israel’s Defence Minister Israel Katz said ‘200,000 residents will not return’ உலகம் செய்தி

தெற்கு லெபனானில் இருந்து படைகளை மீளப்பெறமாட்டோம்- இஸ்ரேல் திட்டவட்டம்

  • June 24, 2026
  • 0 Comments

அமெரிக்கா கோரிக்கை விடுத்தாலும் லெபனானின் தெற்குப் பகுதியிலிருந்து ராணுவத்தை வெளியேற்றப் போவதில்லை என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் Israel Katz , திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான பாதுகாப்பு அனுபவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, ராணுவப் பாதுகாப்பு மண்டலத்தை பராமரிப்பது அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தெற்கு லெபனானில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் இரண்டு லட்சம் மக்கள் மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்ப முடியாது என்பதை அவரது கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன. தனது […]

ஈழத்தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்துடனும், அவர்களது உரிமைகளுடனும் நீண்டகாலமாகத் தன்னை இரண்டறக் கலந்துகொண்டு குரல் கொடுத்து வரும் ஒரு மூத்த அரசியல் தலைவரான வன்னி அரசு, அண்மையில் தமிழ்நாட்டின் சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார். இலங்கை செய்தி

தமிழக அமைச்சர் வன்னி அரசுடன் சிறீதரன் எம்.பி. சந்திப்பு

  • June 24, 2026
  • 0 Comments

தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ,மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சென்னையிலுள்ள சமூக நீதித்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. ஈழத்தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்துடனும், அவர்களது உரிமைகளுடனும் நீண்டகாலமாகத் தன்னை இரண்டறக் கலந்துகொண்டு குரல் கொடுத்து வரும் ஒரு மூத்த அரசியல் தலைவரான வன்னி அரசு, அண்மையில் தமிழ்நாட்டின் சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார். இதனையொட்டி, அவருக்குத் தனது […]

புதுடெல்லியிலுள்ள ஈரான் தூதரகத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாகப் பகிரப்பட்ட இந்த அழைப்பிதழ், டெஹ்ரான் மற்றும் மஷ்ஹாத் ஆகிய நகரங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு கோரப்பட்டுள்ளது. இந்தியா செய்தி

கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்குமாறு மோடிக்கு ஈரான் அழைப்பு

  • June 24, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனிக்குரிய அரசு முறை இறுதிச்சடங்கில் பங்கேற்குமாறு , இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். புதுடெல்லியிலுள்ள ஈரான் தூதரகத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாகப் பகிரப்பட்ட இந்த அழைப்பிதழ், டெஹ்ரான் மற்றும் மஷ்ஹாத் ஆகிய நகரங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு கோரப்பட்டுள்ளது. கமேனியின் இறுதி ஊர்வலத்திற்கு சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உலகத் தலைவர்களுக்கும் அழைப்பு […]

ஈரான் சபாநாயகரும், பேச்சுவார்த்தைக்குழு தலைவருமான Mohammed Bagher Ghalibaf உலகம் செய்தி

இஸ்லாமாபாத் ஒப்பந்தம் அமெரிக்காவின் தோல்விப் பிரகடனம்

  • June 24, 2026
  • 0 Comments

போர் நிறுத்தம் தொடர்பான இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தமானது, அமெரிக்காவின் தோல்விப் பிரகடனமாகும் என்று ஈரான் சபாநாயகரும், பேச்சுவார்த்தைக்குழு தலைவருமான Mohammed Bagher Ghalibaf தெரிவித்தார். அஜர்பைஜானில் நடைபெற்ற மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார் என்று ஈரான் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. “இஸ்லாமாபாத் ஒப்பந்தம் எவ்வித அழுத்தத்தாலோ அல்லது கட்டாயத்தினாலோ ஏற்படுத்தப்பட்டது அல்ல, மாறாக வீரமிக்க ஈரானிய தேசத்தின் சகிப்புத்தன்மை மற்றும் அதிகாரத்தின் விளைவாகவே சாத்தியமானது.” எனவும் Mohammed Bagher Ghalibaf கூறியுள்ளார். சுதந்திர நாடுகள்மீது […]

2026 ஜனவரி முதல் ஜுன் வரையான காலப்பகுதிக்குள் 11 லட்சத்து 4 ஆயிரத்து 354 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர். செய்தி

மீண்டெழுகிறது சுற்றுலாத்துறை – 1.1 மில்லியன் பயணிகள் இலங்கை வருகை

  • June 24, 2026
  • 0 Comments

2026 ஜனவரி முதல் ஜுன் வரையான காலப்பகுதிக்குள் 11 லட்சத்து 4 ஆயிரத்து 354 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரச்சபையின் தரவு பட்டியலில் மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 281,418 பேரும், பிரித்தானியாவில் இருந்து 104,754 பேரும், ரஷ்யாவில் இருந்து 76,963 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். குறித்த நாடுகளே முதல் மூன்று இடங்களில் உள்ளன. சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா, போலந்து, கனடா […]

பிரான்சில் இன்று 58 பிராந்தியங்களுக்கு கடும் வெப்பம் குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு வெப்பநிலை 39 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பா செய்தி

பிரான்சில் கடும் வெப்ப அலை-மின்சார கட்டமைப்பு பாதிப்பு

  • June 24, 2026
  • 0 Comments

ஐரோப்பாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெப்ப அலை, பிரான்சில் ஒரு பெரும் மின்சார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வடமேற்கு பிரான்சில் சுமார் 68,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, ஃபினிஸ்டெர் கடற்கரைப் பகுதியில் மின்சாரக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு மின்மாற்றி கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், செவ்வாய்க்கிழமை இரவு குயிம்பர் நகருக்கு அருகிலுள்ள பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் மின் கட்டமைப்பு இயக்குநர்களின் குழுக்கள் இரவு முழுவதும் மின்சாரத்தை […]