புதிய ஜனாதிபதியை தேர்வு செய்தது ஹங்கேரி நாடாளுமன்றம்
ஹங்கேரி நாட்டின் புதிய ஜனாதிபதியாக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைவரான ஆண்ட்ராஸ் பாகா (Andras Baka) செவ்வாய்க்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் விக்டர் ஆர்பனின் (Viktor Orban) அதிகார மையங்களை அகற்றுவதற்காகத் தற்போதைய பிரதமர் பீட்டர் கெய்ர் (Peter Magyar) எடுத்து வரும் முயற்சிகளில் இது முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
ஆளும் மத்திய-வலதுசாரி ‘திசா’ (Tisza) கட்சியின் ஆதரவுடன், பெரும்பாலும் சடங்குப்பூர்வ அதிகாரங்களைக் கொண்ட இந்த ஜனாதிபதி பதவிக்கு பாகா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேவேளை, எதிர்க்கட்சியான Fidesz கட்சியின் உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
பதவியேற்ற பின்னர் ஆற்றிய உரையில், முந்தைய விக்டர் ஆர்பனின் ஆட்சியைக் கடுமையாக விமர்சித்த பாகா, ஆர்பனின் ஆட்சியின் போது “ஒரே ஒரு கட்சி மட்டுமே அரசாங்கத்தைக் கைப்பற்றி வைத்திருந்தது” என்றும், அதிகாரங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்படாமல் சட்டத்தின் வழியிலான கட்டுப்பாடுகள் இன்றி செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் பீட்டர் கெய்ர் வெற்றி பெற்றதன் மூலம், விக்டர் ஆர்பனின் 16 கால ஆட்சி முடிவுக்கு வந்தது.




