இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஒரு போர்க்குற்றவாளி என்று நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி Zohran Mamdani பகிரங்கமாகச் சாடியுள்ளார். உலகம் செய்தி

நெதன்யாகு போர்க்குற்றவாளி: கைது செய்வோம் – New York மேயர் எச்சரிக்கை

  • July 18, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஒரு போர்க்குற்றவாளி என்று நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி Zohran Mamdani பகிரங்கமாகச் சாடியுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அவரை, ஹேக் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று மம்தானி வலியுறுத்துகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் நெதன்யாகு நியூயார்க் வரவிருக்கும் நிலையில், அவரைத் கைது செய்ய தனது நகர காவல்துறைக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து மேயர் […]

50 killed, 500 wounded in US attacks this month உலகம் செய்தி

அமெரிக்கா உக்கிர தாக்குதல்: ஈரானில் 50 பேர் பலி – 500 இற்கு மேற்பட்டோர் காயம்

  • July 18, 2026
  • 0 Comments

ஜூலை 6 முதல் ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களால் 50 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈரான் சுகாதார அமைச்சு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்தவர்களில் பலருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், சில நோயாளிகள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கை செய்தி

புதிய அரசியல் கூட்டணி குறித்து சுரேஷ், சுமந்திரன் பேச்சு

  • July 18, 2026
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மு.சந்திரகுமார், சி.வேந்தன் மற்றும் நா.இரட்ணலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். […]

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

செம்மணியில் இதுவரை 437 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • July 18, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 437 ஆக அதிகரித்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 36 ஆம் நாள் அகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இன்றைய அகழ்வின் போது புதிதாக 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 5 […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களைப் பல மடங்கு தீவிரப்படுத்தியுள்ளார். அத்துடன் மோதலை மேலும் விரிவுபடுத்தப்போவதாகவும் அச்சுறுத்தியுள்ளார். செய்தி

ட்ரம்பின் போர் யுக்தி இம்முறை கைகூடுமா?

  • July 18, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களைப் பல மடங்கு தீவிரப்படுத்தியுள்ளார். அத்துடன் மோதலை மேலும் விரிவுபடுத்தப்போவதாகவும் அச்சுறுத்தியுள்ளார். எனினும், தெஹ்ரானை (ஈரான்) பணியவைப்பதில் ஏற்கனவே தோல்வியடைந்த இந்த இராணுவ உத்தி, இந்த முறையும் பலன் தருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இரு தரப்பும் இதுவரை முழு அளவிலான போரைத் தவிர்த்து வந்த போதிலும், இந்த நெருக்கடியிலிருந்து விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை மங்கிப்போயுள்ளது. இந்தச் சூழல் உலகளாவிய கச்சா எண்ணெய் […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அழைப்பை ஏற்று, லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவூன் (Joseph Aoun) வாஷிங்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். செய்தி

ட்ரம்பை சந்திப்பதற்காக வாஷிங்டன் பறந்தார் லெபனான் ஜனாதிபதி

  • July 18, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அழைப்பை ஏற்று, லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவூன் (Joseph Aoun) வாஷிங்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். இது குறித்து பெய்ரூட்டில் உள்ள ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளை மாளிகையில் இருதரப்பு உச்சி மாநாடு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, லெபனானின் தற்போதைய நிலைமை மற்றும் அங்கு போர் நிறுத்தத்தை வலுப்படுத்துவதற்கான சாத்தியமான வழிமுறைகள் பற்றி கலந்துரையாடப்படவுள்ளது. லெபனான் மற்றும் குறிப்பாக தெற்குப் பகுதியில் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுப்பது, லெபனானின் ஆக்கிரமிக்கப்பட்ட […]

ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் அஸ்ராக் (Azraq) விமானத் தளம் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) அறிவித்துள்ளது. உலகம் செய்தி

ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமானத் தளம் மீது ஈரான் தாக்குதல்

  • July 18, 2026
  • 0 Comments

ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் அஸ்ராக் (Azraq) விமானத் தளம் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) அறிவித்துள்ளது. இது தொடர்பாக IRGC வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜோர்டானின் அல்-அஸ்ராக் பகுதியில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தில் உள்ள போர் விமானப் பாதுகாப்புப் பெட்டகங்கள் (Fighter jet shelters) மற்றும் பெரிய ரன்வே (Aircraft parking ramp) ஆகியவற்றைக் குறிவைத்து, கடுமையான மற்றும் ஒரே நேரத்திலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை […]

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”க்கு ஆதரவாக காலவரையற்ற உண்ணாவிரதமிருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியா செய்தி

டெல்லியில் பரபரப்பு: 21 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சோனம் வலுக்கட்டாயமாக வைத்தியசாலையில் சேர்ப்பு

  • July 18, 2026
  • 0 Comments

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”க்கு ஆதரவாக காலவரையற்ற உண்ணாவிரதமிருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில், டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 28 நாட்களாக தொடர் போராட்டங்கள் […]

இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் இன்று சனிக்கிழமை (ஜூலை 18) ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. அறிவியல் & தொழில்நுட்பம் இந்தியா செய்தி

இந்திய விண்வெளி வரலாற்றில் முக்கிய மைல்கல்

  • July 18, 2026
  • 0 Comments

இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் இன்று சனிக்கிழமை (ஜூலை 18) ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவின் முதலாவது தனியார் தயாரிப்பான ‘விக்ரம்-1’ (Vikram-1) சுற்றுப்பாதை ஏவுகலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 22 மீட்டர் உயரமும், நான்கு நிலைகளையும் (four-stage) கொண்ட இந்த ராக்கெட் வானத்தை நோக்கிச் சீறிப் பாய்ந்தபோது, அது மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் தனியார் விண்வெளித் துறைக்கு ஒரு வரலாற்றுத் தருணமாக […]

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் புதிய கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபயசிங்க, அதற்காகப் பொருத்தமான காணிகளை உடனடியாக அடையாளப்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை செய்தி

வடக்கில் புதிய கைத்தொழில் பேட்டைகள்: காணிகளை அடையாளம் காண ஏற்பாடு

  • July 18, 2026
  • 0 Comments

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் புதிய கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபயசிங்க, அதற்காகப் பொருத்தமான காணிகளை உடனடியாக அடையாளப்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்துக்குப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள பிரதி அமைச்சர் , வடக்கு மாகாண ஆளுநரை நேற்று (17.07.2026) வெள்ளிக்கிழமை இரவு ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின்போதே […]